Friday, January 21, 2011

பிறருக்காகவே வாழ்ந்தவர் தெரசா: சேவை செய்ய பதவியை பயன்படுத்தியவர் கக்கன்: வாசன்

சென்னை துறைமுகத் தமிழ்ச் சங்கம் சார்பில் அன்னை தெரசா, சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான கக்கன் ஆகியோரின் நூற்றாண்டு விழா, சங்க ஆண்டுவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்றது.



விழாவில் அமைச்சர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தெரசா, கக்கன் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். அப்போது பேசிய அவர்,



ஏழை மக்களுக்காக சேவை செய்வதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர் அன்னை தெரசா. தனக்கென்று எவ்வித ஆசைகளையும் கொள்ளாமல் பிறருக்காகவே வாழ்ந்து மறைந்தவர் அவர்.



அதேபோல் அரசியலில் அப்பழுக்கற்றவகையில் ஒழுக்க சீலராகவே வாழ்ந்து மறைந்தவர் கக்கன். உயர்ந்த குணங்களால் சிறந்த நிலைக்கு வந்தவர். பதவியை மக்களுக்குச் சேவை செய்வதற்காக
மட்டுமே பயன்படுத்த வேண்டும், பணமும், சொத்தும் சேர்ப்பதற்காக அல்ல எனபதை உணர்த்திய உயர்ந்த மனிதர் கக்கன்.

No comments:

Post a Comment