Friday, January 21, 2011

டீசல் விலை உயர்த்தப்படமாட்டாது': ஜெய்ப்பால் ரெட்டி

புது தில்லி, ஜன.20: டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்தார்.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 7 நஷ்டம் ஏற்படுகிறது. இருப்பினும் விலையை உயர்த்தும் உத்தேசம் இல்லை என்று அவர் கூறினார்.


டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதமே மத்திய அமைச்சரவை பரிந்துரைத்ததே. இது குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, யாருமே முடிவு எடுக்க இத்தனை காலம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோல் மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டபிறகு இதுவரை 7 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் இப்போதைய விலை உயர்வை திரும்பப் பெறமாட்டாது என்று திட்டவட்டமாக அவர் கூறினார்.

மானிய விலையில் எரிபொருள் விற்பனையால் நடப்பு நிதி ஆண்டில் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என தெரியவந்துள்ளது. இதனால் சுங்க வரி, உற்பத்தி வரியைக் குறைக்க வேண்டும் என முரளி தேவ்ரா ஏற்கெனவே வலியுறுத்தி வந்தார். இதையே தானும் வலியுறுத்தப் போவதாக அவர் சொன்னார்

No comments:

Post a Comment