Saturday, January 29, 2011

காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்!

அன்புள்ள இயக்குனர் சீமான் அவர்களுக்கு,

வணக்கம். ‘இனியவளே’ படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும்.


பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி- இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்!

திரைக்கலைஞர்களாக இருந்து கொண்டே தமிழீழ மக்களைக் காப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து போராடினோம். ஆவேசமான பேச்சு, கைது, சிறை என்று நீங்கள் போனீர்கள். ஒரு கட்டத்தில் நேரடியாக அரசியலில் இறங்கி ‘நாம் தமிழர்’ கட்சியை நிறுவுனீர்கள். தெளிவான சில அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கினாலும் நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவனில்லை. எப்போதும் இப்படி இருப்பதையே விரும்புகிறேன்.

ஆனால் உங்கள் முயற்சியும் அதில் நீங்கள் கண்டுவரும் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மொழி- இனவுணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று நீங்கள் முழங்குவதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் வரிசையை மென்மேலும் நீளச் செய்யும் என்பது உறுதி!

என் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது உலகத் தமிழர்கள் உங்கள் பால் வைத்துள்ள நேசத்தை நேரில் அறிந்து வியந்தேன், மகிழ்ந்தேன். அத்துணைப் பேரும் உங்களைத் தங்கள் உறவாகவே மதிக்கிறார்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் ‘நம்பிக்கை நாயக’னாக நீங்கள் நிற்பது கண்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.

ஆனால், உங்கள் நலம் விரும்பிகள்… என்று சாதாரணமாகச் சொல்லமாட்டேன், உங்கள் உறவுகளை – நான் உட்பட- உரிமைச் சொந்தங்களை, அண்மையில் குழம்பித் திகைக்கச் செய்துள்ள ஒன்றை, உங்கள் முகத்திற்கு நேரே சொல்லப் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை- இந்த திறந்த மடல் வழியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.

வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவையும் அ.தி.மு.க வையும் ஆதரிக்கப் போவதாக நீங்கள் பேசியும் எழுதியும் வருவது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது.

நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் அதற்காக அ.தி.மு.க வை ஆதரிக்கவேண்டும் என்றால் எப்படி?

யார் இந்த ஜெயலலிதா?

‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, காலத்தால் அழிக்க முடியாத அரும்பெரும் பொன்மொழியை உதிர்த்தவர் அல்லவா? அதுதான் அவருடைய ‘உண்மையான உள்ள வெளிப்பாடு’!

தேசியத் தலைவரைப் பிடித்து இழுத்து வந்து தூக்கில்போட ஆசைப்பட்டவர், நோய்வாய்ப்பட்ட ஐயா ஆன்ரன் பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாமல் மூர்க்கமாகத் தடுத்து அவர் உயிருக்கு உலையானவர், வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களைப் பொடாக் கொடுஞ்சிறையில் அடைத்தவர், இப்படியெல்லாம் கொடுமைகள் புரிந்ததற்கு இன்றுவரை ஒப்புக்குக்கூட வருந்தாதவர், இன்றளவும் ராஜபட்சே புரிந்த இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர், அந்தக் கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசைக் கண்டிக்காதவர், தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காக ‘தமிழீழம் அமைத்துத் தருவேன்’ என்று முழங்கிவிட்டு, தமிழ் மக்கள் இவர் ‘சிலநாள் மட்டும் நடிக்க வந்த புது நாடகத்தை’ நம்பவில்லை என்றதும், உண்ணாவிரதக் களைப்பு நீங்க கொடாநாடு போய்விட்டவர் – இவரையா சீமான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன கொடுமை இது?

உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?

உங்கள் நிலையை சுபாஷ் சந்திரபோசோடு ஒப்பிடுகிறீர்கள். அவர் பிரிட்டனை எதிர்க்க ஜப்பானியனை நாடியதாகக் கூறுகிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனால் ஜப்பான் பிரிட்டனின் எதிரிநாடு! பிரிட்டனை மெய்யாகவே எதிர்த்தது, போர் புரிந்தது. களத்தில் நின்றது. எனவே போஸ் ஜப்பானிய ‘இராணுவ’த்தின் உதவியை நாடினார். இங்கே ஜெ உண்மையிலேயே காங்கிரசை எதிர்க்கிறாரா? இந்த வகையிலும் கலைஞர் செய்வதைத்தானே ஜெவும் செய்கிறார்?

தீயை அணைக்க சாக்கடையை வீசலாம். பெற்ரோலை வீசலாமா?

கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெயின் இனத்துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா?

‘ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்குவேன்’ என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அவர் இதுவரை தமிழர் விரோதப் போக்கில் செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லது ‘இனி தமிழர் விரோதப் போக்கில் செயல்படமாட்டேன்’ என்று உங்களிடம் தனியாக ஏதும் உறுதியளித்திருக்கிறாரா?..

கலைஞர் காங்கிரசோடு அப்பிக் கொண்டிருப்பவர், ஜெ அதைப் பிய்த்து எடுத்துத் தான் அப்பிக் கொள்ளத் துடிப்பவர். இவர்களுக்கிடையே எதில்தான் வேறுபாடு உள்ளது – ஒருவர் வேட்டி, மற்றவர் சேலை அணிவது தவிர?

ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா?

‘அதிமுக ஆட்சிக்கு வந்தர்லும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை – வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் – ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும். இப்போது அவசரமாகக் கலைஞரைப் பதவியிறக்கி, அம்மையாரை அரியணையில் அமர்த்தி நாம் சாதிக்கப் போவது என்ன? – அரசு அலுவலகங்களில் தொங்கும் படம் மாறும் என்பதைத் தவிர?

ஐந்தாண்டு கழித்து (ஜெயின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!

தமிழக அரசியல் என்பது ரங்க ராட்டினமாகி வெகுகாலமாகிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஏறினால் மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி, ‘தலைசுற்றிப்’ போகலாமே தவிர, வேறு ஊருக்குப் பயணம் போக முடியாது. இதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்… அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள்.

விஜயகாந்த் இட்டு நிரப்ப முயன்றது இந்த இடத்தைத்தான். இரு கழகங்களுக்கும் மாற்றாக அவர் இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் இன்றைய இடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் மக்களை ஏமாற்றிவிட்டார். ஊழலற்ற நல்லாட்சி என்ற அடிப்படையில்தான் அவர் மக்களை அணுகினார். தமிழினம், தமிழர் இறையாண்மை என்ற அடிப்படையில் அணுகவில்லை. எனவேதான் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் நிலைக்கு நெருங்கி வந்தார். காலாவதியாகிப் போன இந்திய இறையாண்மை என்ற இறகுத் தொப்பியை அணிந்து வந்தவர் அவர். தமிழக அரசியல் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்!

காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் தமிழீழத்தைச் சிதைத்தார்கள் என்பதற்காக மட்டும்தானா? இல்லவே இல்லை. இன்னும் விரிந்த நோக்கில், நம் தௌ;ளிய, நேரிய நோக்கமான ‘தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை பெற்ற தமிழ்நாடு’ ஆகியவற்றின் முழுமுதல் எதிரியாகவும் இருப்பதால்தானே?

உங்களிடம் தமிழினம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு அன்று இந்தியத் தேசியம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்தோடு அதன் தேவை முடிந்துபோய் விட்டது. காங்கிரஸ் கட்சி அத்தோடு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் எதிராக வளர்ந்து, அடித்துத் தின்ன முயன்றது. ஆதனால் ‘திராவிட தேசியத்தின்’ தேவை உருவானது. திமுக அபரிதமான வெற்றி பெற்றது. ஆனால் பதவி நாற்காலியில் அமர்ந்த பின் தன் கொள்கைகளைக் கைகழுவி விட்டது. திமுக வும் எதிர்க்கட்சியான அதிமுக வும் மீண்டும் ‘இந்திய தேசியத்’தைச் தூக்கிச் சுமக்கப் போட்டியிடுகின்றன. பதவிக்காக இந்தக் கழகங்கள் போட்டுக் கொள்ளும் பங்காளிச் சண்டை காங்கிரசுக்கு மறுபிறவி கொடுத்துவிட்டது. ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை.

தமிழ்த் தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு, களம் காணும் அரசியற் கட்சிகளே இல்லை என்ற நிலையில் நீஙகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறீர்கள் சீமான் அவர்களே… உங்கள் பொறுப்பு பெரும் பொறுப்பு. எதிர்காலத் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றும் மகத்தான கடமை!

சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை- சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும். தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம்.

அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது?

நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.
இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம்.
மற்றத் தொகுதிகளில் ‘திமுக வும் அதிமுக வும் ஒன்றே’ என்ற நிலைப்பாட்டை எடுங்கள். ’49 ஓ’ வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள்.
இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!

Friday, January 28, 2011

Overall capacity of Indian ports touches 1 billion-tonne mark

(From left) Union Minister for Textiles Dayanidhi Maran, Union Minister for Shipping G.K. Vasan, Ministry of Shipping Secretary K. Mohandas, CICTL, MD M.A.M.R. Muthiah, and Ennore Port Limited CMD S.Velumani at the inauguration of the Common User Coal, Iron Ore and Car Terminals at Ennore Port in Chennai. Photo: K.V. Srinivasan

Tuesday, January 25, 2011

தூ‌த்து‌க்குடி - இல‌ங்கை‌க்கு ‌பி‌ப்ரவ‌‌ரி இறு‌தி‌யி‌ல் க‌ப்ப‌ல் சேவை: ‌ஜி.கே.வாச‌ன்

தூ‌த்து‌க்குடி - இல‌ங்கை இடையே ‌அடு‌த்த மாத‌ம் இறு‌தி‌‌யி‌ல் க‌ப்ப‌ல் போ‌க்குவர‌த்து தொட‌ங்க‌ப்படு‌ம் எ‌‌ன்று ம‌த்‌‌திய க‌ப்ப‌ல் போ‌க்குவர‌த்து‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌ஜி.கே.வாச‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தூ‌த்து‌க்குடி துறைமுக‌த்த‌ி‌‌ல் பய‌ணிக‌ள் முனைய‌த்தை ‌‌திற‌ந்துவை‌த்த ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய அவ‌ர், பெ‌ரிய க‌‌ப்ப‌ல்களை கையாளு‌ம் வகை‌யி‌ல் 538 கோடி ரூபா‌ய் செல‌வி‌ல் கடலை ஆழ‌ப்படு‌த்து‌ம் ப‌ணிக‌ள் நடைபெ‌ற்று வரு‌கிறது எ‌ன்று‌ம் அடு‌த்த ஆ‌ண்டு அத‌ற்கான ‌தி‌ட்ட‌ப்ப‌ணிக‌ள் முடிவடையு‌ம் எ‌ன்றா‌ர்.

இ‌ந்‌திய துறைமுக‌ங்க‌ளி‌‌ல் சர‌க்குகளை கையாளு‌ம் ‌திறனை 3,200 ‌மி‌ல்‌லிய‌ன் ட‌ன்னாக அ‌திக‌ரி‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளதாகவு‌ம் ‌‌ஜி.கே.வாச‌ன் கூ‌றினா‌ர்.

முத‌ல் க‌ட்டமாக தூ‌த்து‌க்குடி - இல‌ங்கை இடையே பய‌ணிக‌ள் க‌ப்ப‌ல் போ‌க்குவர‌த்து வா‌ர‌த்‌தி‌ற்கு 3 முறை நா‌ட்க‌ள் இய‌க்க‌ப்ப‌டு‌ம் எ‌ன்று‌ம் ‌பி‌ன்ன‌ர் படி‌ப்படியாக ‌தினச‌ரி க‌ப்ப‌ல் சேவை நடைபெறு‌ம் எ‌‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இ‌ச்சேவையை தொட‌ர்‌ந்து மால‌த்‌‌தீவு, ல‌ட்ச‌த்‌தீவு‌க்கு பய‌ணிக‌ள் க‌ப்ப‌ல் சேவை தொட‌ங்க நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு வருவதாகவு‌ம் ‌ஜி.கே.வாச‌ன் த‌ெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்தியர்களின் கறுப்புப் பண விவரங்கள்: வெளியிடுமா மத்திய அரசு?

டெல்லி: வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது மற்றும் இதுவரை கிடைத்துள்ள தகவல்களை வெளியிடும் விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

ஸ்விட்சர்லாந்து, மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளில் பல லட்சம் கோடி அளவுக்கு கறுப்பு பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளனர். இந்த வங்கி கணக்குகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிடவும், அந்தப் பணத்தை பறிமுதல் செய்து இந்தியாவுக்கு கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த விவகாரத்தில் சில நாடுகளிடமிருந்து இந்தியர்களின் கருப்புப் பண கணக்கு விவரங்களை இந்திய அரசு பெற்றுவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதை வெளியிடாதது மட்டுமல்ல, நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனம் காட்டி வருகிறது.

மத்திய அரசின் இந்தப் போக்கை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் இந்த மெத்தனத்துக்கு கண்டனம் தெரிவித்தது. எனினும், கறுப்பு பண வங்கி கணக்குகளை மத்திய அரசு வெளியிட்டபாடில்லை. மேலும் ஜெர்மனி அரசு, தங்கள் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பண விவரங்களை வெளியிடத் தயாராக இருப்பதாக அறிவித்தும், அதற்கு இந்திய தரப்பிலிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், "வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை கொண்டு வருவதற்கு உடனடி தீர்வு எதுவும் இல்லை. வரி ஏய்ப்பு மற்றும் வரி வசூலுக்காக சில தகவல்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருக்கிறோம். அவற்றை பகிரங்கமாக வெளியிட முடியாது'' என்றார்.

இதுபோல மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், "சர்வதேச ஒப்பந்தங்களின் படி, சில நாடுகளில் இருந்து கறுப்பு பண வங்கி கணக்குகள் பற்றிய தகவல்களை மத்திய அரசு பெற்றுள்ளது. ஆனால், அவற்றை வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் எந்தவொரு நாடும் இத்தகைய தகவல்களை நமக்கு அளிக்காது'' என்றார்.

மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும் அதில் தங்கள் கட்சியினர் இருந்தால் தாராளமாக கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பா.ஜனதா தலைவர் நிதின் கட்காரி அறிவித்தார்.

உச்ச நீதிமன்றமும், "இது வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சினை மட்டும் கிடையாது.
தேசத்தின் சொத்து களவு போயிருக்கிறது. கிரிமினல் புத்தியுடன் நடந்த திருட்டாக கருத வேண்டும். நடுத்தர மக்களிடம் வரி வசூல் செய்வதில் காட்டும் கண்டிப்பையும் கறாரையும், கறுப்பு பண பதுக்கல்காரர்களிடம் காட்ட மறுப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்திவிட முடியாது" என காய்ச்சி எடுத்தது.

இந் நிலையில், கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் அதில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அறிவிக்கிறார்.

இதற்காக இன்று சிறப்பு செய்தியாளர் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Friday, January 21, 2011

பிறருக்காகவே வாழ்ந்தவர் தெரசா: சேவை செய்ய பதவியை பயன்படுத்தியவர் கக்கன்: வாசன்

சென்னை துறைமுகத் தமிழ்ச் சங்கம் சார்பில் அன்னை தெரசா, சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் அமைச்சருமான கக்கன் ஆகியோரின் நூற்றாண்டு விழா, சங்க ஆண்டுவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்றது.



விழாவில் அமைச்சர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தெரசா, கக்கன் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். அப்போது பேசிய அவர்,



ஏழை மக்களுக்காக சேவை செய்வதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர் அன்னை தெரசா. தனக்கென்று எவ்வித ஆசைகளையும் கொள்ளாமல் பிறருக்காகவே வாழ்ந்து மறைந்தவர் அவர்.



அதேபோல் அரசியலில் அப்பழுக்கற்றவகையில் ஒழுக்க சீலராகவே வாழ்ந்து மறைந்தவர் கக்கன். உயர்ந்த குணங்களால் சிறந்த நிலைக்கு வந்தவர். பதவியை மக்களுக்குச் சேவை செய்வதற்காக
மட்டுமே பயன்படுத்த வேண்டும், பணமும், சொத்தும் சேர்ப்பதற்காக அல்ல எனபதை உணர்த்திய உயர்ந்த மனிதர் கக்கன்.

டீசல் விலை உயர்த்தப்படமாட்டாது': ஜெய்ப்பால் ரெட்டி

புது தில்லி, ஜன.20: டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்தார்.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 7 நஷ்டம் ஏற்படுகிறது. இருப்பினும் விலையை உயர்த்தும் உத்தேசம் இல்லை என்று அவர் கூறினார்.


டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதமே மத்திய அமைச்சரவை பரிந்துரைத்ததே. இது குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, யாருமே முடிவு எடுக்க இத்தனை காலம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோல் மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டபிறகு இதுவரை 7 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் இப்போதைய விலை உயர்வை திரும்பப் பெறமாட்டாது என்று திட்டவட்டமாக அவர் கூறினார்.

மானிய விலையில் எரிபொருள் விற்பனையால் நடப்பு நிதி ஆண்டில் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என தெரியவந்துள்ளது. இதனால் சுங்க வரி, உற்பத்தி வரியைக் குறைக்க வேண்டும் என முரளி தேவ்ரா ஏற்கெனவே வலியுறுத்தி வந்தார். இதையே தானும் வலியுறுத்தப் போவதாக அவர் சொன்னார்

Wednesday, January 19, 2011

சென்னை துறைமுக மேம்பாட்டிற்கு ரூ.10,000 கோடி : அமைச்சர் ஜி.கே.வாசன் தகவல்

சென்னை : ""சென்னைத் துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 10 ஆயிரம் கோடி ரூபாயில், மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். சென்னை - எண்ணூர் துறைமுகங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும், கனரக வாகனங்கள் வந்து செல்ல வசதியாக சென்னை - எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைகளை, 600 கோடி ரூபாயில் விரிவாக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின. பல்வேறு சிக்கல்களால் எட்டாண்டுகளாக கிடப்பில் போன இந்த திட்டத்திற்கு புத்துயிர் கிடைத்துள்ளது.


முதற்கட்டமாக, 254 கோடி ரூபாயில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகள் துவக்க விழா திருவொற்றியூரில் நடந்தது. மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து பேசியதாவது: வடசென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சென்னைத் துறைமுகத்திலிருந்து சரக்குகளை தாமதமின்றி, விரைவாக வெளியேற்ற முடியும் என்பதோடு, தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் பெருகவும் இத்திட்டம் பயனுள்ளதாக அமையும். கப்பல் அமைச்சக முயற்சியால், இந்திய துறைமுகங்களின் சரக்குகள் கையாளும் திறன் வேகமாக உயர்ந்து வருகிறது. நமது துறைமுகங்கள் உலக அளவில் தலைசிறந்ததாக உயர, இது போன்ற திட்டங்கள் அவசியம்.


தற்போது 6.1 கோடி டன்களாக உள்ள சென்னைத் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன், 10 ஆண்டுகளில் இது 14 கோடி டன்னாக உயரும். இதை கருத்தில் கொண்டு, சென்னை மெகா கன்டெய்னர் முனையம், கார் ஏற்றுமதிக்கு "ரோ-ரோ மையம்', ஸ்ரீபெரும்புதூரில் உலர் துறைமுகம், மதுரவாயலிலிருந்து சென்னைத் துறைமுகத்திற்கு நான்கு வழிச்சாலை உட்பட 29 திட்டங்கள், 10 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


எண்ணூர் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, திருவொற்றியூர் நகராட்சியிடமிருந்து நீண்ட கால குத்தகைக்கு பெறப்பட்டுள்ள 11 ஏக்கர் இடம், கன்டெய்னர் டிரெய்லர்கள் நிறுத்துமிடமாக மேம்படுத்தப்படும். ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய ரயில்வே அமைச்சரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை - எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலை திட்டப் பணிகள் இரண்டாண்டுகளுக்குள் முடிக்கப்படும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு பல்வேறு வகையில் உதவி வருகிறது. இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.


மாநில அமைச்சர்கள் சாமிநாதன், சாமி, இளங்கோவன் எம்.பி., நெடுஞ்சாலைத்துறைச் செயலர் சந்தானம், துறைமுகத் தலைவர்கள் அதுல்ய மிஸ்ரா (சென்னை), வேலுமணி (எண்ணூர்) உட்பட பலர் பங்கேற்றனர்.


சென்னை மீன் பிடி துறைமுக மேம்பாட்டிற்கு ரூ.120 கோடி : வடசென்னை எம்.பி., இளங்கோவன் பேசும் போது, ""சென்னைத் துறைமுகத்தை 2,500 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மேம்படுத்துகிறீர்கள். அருகே உள்ள மீன் பிடி துறைமுகத்தை மேம்படுத்த 120 கோடி ரூபாய் போதும். மத்திய அமைச்சர் வாசன், மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். இவ்வாறு அவர் கோரிக்கை வைத்தபோது இடைமறித்த வாசன், ""உங்கள் கோரிக்கை ஏற்கப்படும்; மீன் பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும்,'' என்றார்.

மத்திய அமைச்சரவையில் 3 புதுமுகங்கள் பதவியேற்பு : 28 அமைச்சர்கள் இலாகா மாற்றம்

புதுடெல்லி : ஐ.மு. கூட்டணி அரசு 2வது முறையாக பதவியேற்ற 21 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங் முதல் முறையாக நேற்று தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார். இதில், 28 அமைச்சர்களின் 37 இலாகாக்கள் அதிரடியாக மாற்றப்பட்டன. 3 புதுமுகங்கள் பதவியேற்றனர். பிரபுல் படேல், சல்மான் குர்ஷித், ஜெய்ஷ்வால் ஆகியோர் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசு 2009ம் ஆண்டு, மே மாதம் 2வது முறையாக பதவியேற்றது. அதன் பிறகு, ஐ.பி.எல்., ஸ்பெக்ட்ரம் விவகாரங்களில் மத்திய அமைச்சர்கள் சசி தரூர், ஆ. ராசா ராஜினாமா செய்தனர். ஆதர்ஷ் கட்டிட முறைகேடு குற்றச்சாட்டால் மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் பதவி இழந்ததை தொடர்ந்து, மத்திய அமைச்சராக இருந்த பிருத்வி ராஜ் சவான் முதல்வர் பதவியேற்றார். இதனால் மத்திய அமைச்சரவையில் ஏற்பட்ட காலியிடங்கள் அப்படியே இருந்தன. இவர்கள் வகித்து வந்த இலாகாக்கள், பல்வேறு அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டதால் அவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டது.

இதையடுத்து, அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டார். இது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கடந்த திங்கட்கிழமை ஆலோசனை நடத்தி பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஐ.மு.கூட்டணித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 6 அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதில், இதுவரை தனிப் பொறுப்பு அமைச்சர்களாக இருந்த பிரபுல் படேல் (விமானப் போக்குவரத்து), ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஷ்வால் (நிலக்கரி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம்), சல்மான் குர்ஷித் (கம்பெனி விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரம்) ஆகியோர் காபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் பிரபுல் படேலுக்கு கனரக தொழிற்துறை மற்றும் பொதுத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஜெய்ஷ்வாலுக்கு நிலக்கரித் துறையும், சல்மான் குர்ஷித்துக்கு நீர்வளத் துறையும், கூடுதல் பொறுப்பாக சிறுபான்மையினர் விவகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.

பெனி பிரசாத் வர்மா (உத்தரப்பிரதேசம்), அஸ்வனி குமார் (பஞ்சாப்), கே.சி. வேணுகோபால் (கேரளா) ஆகியோர் புதிய இணையமைச்சர்களாக பதவியேற்றனர். 1996 ஐ.மு. கூட்டணி அரசில் கேபினட் அமைச்சராக இருந்த வர்மாவுக்கு, இந்த முறை பதவி அளிக்கப்படாமல் இருந்தது. இப்போது, அவருக்கு தனி பொறுப்பு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

வேணுகோபால் ஆழப்புழா தொகுதியில் இருந்து முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 47 வயதான அவருக்கு மின்சாரத் துறை வழங்கப்பட்டுள்ளது. அஸ்வனி குமாருக்கு திட்டம், நாடாளுமன்ற விவகாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை உள்துறை இணையமைச்சராக இருந்த அஜய் மாகென், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை தனிப் பொறுப்பு அமைச்சராக பதவியேற்றார். அதேபோல், விவசாயம், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் பதவி வகித்து வந்த கே.வி. தாமஸ், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை தனிப் பொறுப்பு அமைச்சராக பதவியேற்றார்.

இது தவிர, 28 அமைச்சர்களின் இலாகாக்கள் தடாலடியாக மாற்றப்பட்டுள்ளன. சரத் பவார், வீர்பத்ர சிங், விலாஸ்ராவ் தேஷ்முக், ஜெய்ப்பால் ரெட்டி, கமல்நாத், வயலார் ரவி, முரளி தியோரா, கபில் சிபல், ஹண்டிக், சி.பி. ஜோஷி, குமாரி ஷெல்ஜா, சுபோத் காந்த் சகாய், எம்.எஸ். கில், பவன் குமார் பன்சால் ஆகிய 14 காபினட் அமைச்சர்களின் இலாகாக்களும், தனி பொறுப்பு அமைச்சர்களில் தின்ஷா படேலின் இலாகாவும் மாற்றப்பட்டுள்ளன.

இணையமைச்சர்களில் ஹரிஷ் ராவத், நாராயணசாமி, இ. அகமது, குருதாஸ் காமத், சாய் பிரதாப், பாரத்சிங் சோலங்கி, ஜிதின் பிரசாதா, மாதவ் கே. கந்தேலா, ஆர்.பி.என். சிங், துஷார்பாய் சவுத்ரி, அருண் யாதவ், பிரதிக் பிரகாஷ்பாபு படேல், வின்சென்ட் பாலா ஆகியோரின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுத் துறை பொறுப்பு வகித்து வந்த ஜெய்ப்பால் ரெட்டிக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையும், இந்த துறையை ஏற்கனவே வகித்து வந்த முரளி தியோராவுக்கு கம்பெனி விவகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை இலாகா வகித்து வந்த கமல்நாத்துக்கு நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.

இவர் வகித்து வந்த துறை, சி.பி. ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு முறைகேடு குற்றச்சாட்டால் விமர்சனத்துக்கு ஆளான விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறை அமைச்சர் எம்.எஸ். கில்லுக்கு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தரப்பட்டுள்ளது. கனரக தொழில் மற்றும் பொதுத்துறை அமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு கிராமப்புற மேம்பாட்டுத் துறையும், கூடுதல் பொறுப்பாக பஞ்சாயத்து ராஜ் துறையும் வழங்கப்பட்டுள்ளது. வயலார் ரவிக்கு விமானப் போக்குவரத்து துறை கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது.

பட்ஜெட்டுக்கு பிறகு மீண்டும் மாற்றம்: பிரதமர்

அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், ‘அமைச்சரவையில் இப்போது சிறிய மாற்றம்தான் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு பெரிய மாற்றம் செய்யப்படும்’ என்றார். அமைச்சரவை மாற்றத்தில் எல்லா மாநிலத்துக்கும் பிரதிநிதித்துவம் தரப்படும், கூட்டணி கட்சிகளுக்கு கூடுதலாக சில பதவிகள் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சட்டீஸ்கர், கோவா, மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.

பதவி பறிப்பு இல்லை: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், காங்கிரசில் மூத்த அமைச்சர்கள் சிலரை கட்சி பணிக்கு அனுப்ப பதவி பறிக்கப்படலாம் என செய்திகள் வெளியாயின. ஆனால், யார் பதவியும் பறிக்கப்படவில்லை. அதே போல், இலாகா மாற்றத்திலும் தமிழக அமைச்சர்கள் யாருக்கும் மாற்றம் செய்யப்படவில்லை.

81 ஆக உயர்வு

மத்திய அமைச்சரவையில் நேற்று 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்றதை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவை எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது. இதில் 35 பேர் கேபினட் அமைச்சர்கள். 6 பேர் தனி பொறுப்பு இணை அமைச்சர்கள். 40 பேர் இணை அமைச்சர்கள்.

Monday, January 17, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் அணி அறிவிப்பு-ஸ்ரீசாந்த், ரோஹித் நீக்கம்-அஸ்வினுக்கு இடம்

சென்னை: உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் ஆர்.அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளன. பிப்ரவரி 18ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை ஏற்கனவே இந்தியா அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 15 பேர் கொண்ட இறுதி அணியை இன்று அறிவித்தது இந்திய அணி தேர்வுக்குழு. ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய தேர்வாளர் குழு சென்னையில் கூடி இன்று இந்திய அணி வீரர்கள் குறித்து தீவிர ஆய்வு நடத்தியது.

இதன் இறுதியில் டோணி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இந்திய அணி விவரம்:

எம்.எஸ்.டோணி (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், யுவராஜ் சிங், விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ஜாகிர் கான், பிரவீன் குமார், முனாப் படேல், ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ஆர்.அஸ்வின், பியூஷ் சாவ்லா.

முரளி விஜய்-திணேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு மறுப்பு
Read: In English
ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடிய முரளி விஜய்க்கு உலகக் கோப்பைப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல திணேஷ் கார்த்திக்கும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால். அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியில், டோணி மட்டுமே விக்கெட் கீப்பராக உள்ளார். 2வது விக்கெட் கீப்பர் இடம் பெறவில்லை. உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் 7 பந்து வீச்சாளர்கள், 6 பேட்ஸ்மென்கள், ஒரு விக்கெட் கீப்பர், ஒரு ஆல் ரவுண்டர் (யூசுப் பதான்) இடம் பெற்றுள்ளனர்

முன்னாள் லோக்சபா சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் மகன் சுட்டுக் கொலை

டெல்லி: முன்னாள் லோக்சபா சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் மகனும், பிரபலமான கூட்டுறவியலாளருமான சுரிந்தர் குமார் ஜாக்கர் இன்று பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இஃப்கோ என்று அழைக்கப்படும் இந்திய விவசாய உரக கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக இருந்து வந்தார் சுரிந்தர். இன்று பிற்பகலில் அவர் பஞ்சாப் மாநிலம் அபோஹரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இடம், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லையில் உள்ள நகரமாகும்.

அடையாளம் தெரியா சிலரால் ஜாக்கர் சுடப்பட்டார். அவரை சுட்டுக் கொன்றது ஏன் என்பது குறித்துத் தெரியவில்லை.

கடந்த 30 வருடங்களாக நாட்டின் பல்வேறு கூட்டுறவு கழகங்களுடன் இணைந்து பணியாற்றி வந்தவர் சுரிந்தர். விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சியில் கணிசமான பங்காற்றியவர். பஞ்சாப் மாநிலத்தில் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபட்டுள்ளார்.

உலகஅளவில் உள்ள கூட்டுறவுக் கழகங்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

Friday, January 14, 2011

கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்துமா மம்தா-காங்கிரஸ் கூட்டணி?


மேற்குவங்கத்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் இடதுசாரிகள் கூட்டணி அரசை எப்படியாவது ஆட்சி கட்டிலிலிருந்து இறக்கிவிட வேண்டுமென்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி இந்த படு தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

மம்தாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசு மூலம் புத்ததேவ் ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருப்பதால், மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் உள்ளபோதிலும், அரசியல் களம் அங்கு சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

அநேகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு, இந்த பதவி காலத்தில் சந்தித்த சோதனைகள் மற்றும் நெருக்கடிகளைப் போன்று முந்தைய பதவி காலத்தில் சந்தித்திருக்காது என்றே கூறலாம்.





2006 ல் தொடர்ந்து 7 ஆவது முறையாக ஆட்சியை பிடித்து சாதித்தது இடதுசாரி கூட்டணி.ஆனால் ஆட்சிக்கு வந்த இரண்டாமாண்டு முதலே சோதனைகள் தொடங்கின.சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நானோ கார் தொழிற்சாலை அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, புத்ததேவ் அரசு பெரும் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது.

விவசாயிகளுக்கு ஆதரவாக மம்தாவும் தனது கட்சியுடன் களமிறங்க, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தால் டாடா நிறுவனம் தனது தொழிற்சாலையை மூட்டைக் கட்டிக்கொண்டு குஜராத்தை நோக்கி ஓடியது.
1

‌பிரபாகரனை தடு‌த்தவ‌ர் வைகோ: அ‌ன்பரசு கு‌ற்ற‌ச்சா‌ற்று

இறுதிகட்டப் போரில் ஆயுதங்களை கைவிட்டு, இலங்கை, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்த பிரபாகரனை தடுத்தவர் வைகோதான் எ‌ன்று‌ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் அன்பரசு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ தயாரித்துள்ள குறுந்தகடுகளை கைப்பற்ற வேண்டும் எ‌ன்று‌ அவ‌ர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையி‌ன் மூல‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் வைகோவை கைது செய்ய வேண்டும் எ‌ன்று‌ம் தேர்தல் ஆணையம் அவரது கட்சியை தடை செய்ய வேண்டும் எ‌ன்று‌ம் அவ‌ர் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது என்று வைகோ கூறிவருவதை வன்மையாக கண்டி‌த்து‌ள்ள அ‌ன்பரசு, வைகோவின் ஆலோசனையால் தான் பிரபாகரன் சர்வாதிகாரியாக செயல்பட்டார் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இறுதிகட்டப் போரில் ஆயுதங்களை கைவிட்டு, இலங்கை, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்த பிரபாகரனை தடுத்தவர் வைகோதான் எ‌ன்று‌ம் அ‌ன்பரசு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

உணவு பொரு‌ள் பதுக்கல்காரர்களு‌க்கு மத்திய அரசு எ‌ச்ச‌ரி‌க்கை

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பதுக்கல்காரர்கள், கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று ம‌த்‌திய அரசு எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவு பொரு‌‌‌‌ட்களை பது‌க்‌கி வை‌க்கு‌ம் கட‌த்த‌ல்கார‌ர்க‌ள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதன்மூலம், சந்தைக்கு பொருட்கள் உரிய நேரத்தில் வருவதுடன், விலையும் குறையும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்த நடவடிக்கையை மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும் எ‌‌ன்று‌ம் ம‌த்‌திய அரசு கே‌ட்டு‌‌க் கொ‌ண்டு‌ள்ளது.

சமையல் எண்ணெய், பருப்பு, பாசுமதி அல்லாத அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும் எ‌ன்று‌ம் ம‌த்‌திய அரச தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கொள்முதலை தீவிரப்படுத்தி, அவற்றை ‌நியாய‌விலை கடைகள் மூலம் வழங்குமாறு பொதுத்துறை நிறுவனங்களை கேட்டுக் கொள்வோம் எ‌ன்று‌ம் மானிய விலையில் சமையல் எண்ணெய், பருப்பு விற்பனை தொடரும் என்று‌ம் அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

HAPPY TAMIL NEWYEAR

WISH U HAPPY TAMIL NEW YEAR ALL OF THEM
TEAM BY
PALLAVARAM CONGRESS
EDITOR P J R

மத்திய அரசின் கடல்சார் செயல் திட்டத்தை, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் டில்லியில் நடந்த விழாவில் வெளியிட்டார்

இந்திய துறைமுகங்களையும், கப்பல் துறைகளையும் மேம்படுத்த, ஐந்து லட்சம் கோடி ரூபாய் மூலதனத்துடன் செயல்படுத்தப்பட உள்ள மத்திய அரசின் கடல்சார் செயல் திட்டத்தை, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் டில்லியில் நடந்த விழாவில் வெளியிட்டார்

சென்னை அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர்-கருணாநிதி அறிவிப்பு

சென்னை அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர்-கருணாநிதி அறிவிப்பு

சென்னை: இன்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சென்னை அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கையை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றிவிட்டார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது,

இன்று தமிழ்நாட்டில் உள்ள 76 பிற்படுத்தப்பட்ட இன மக்கள் ஆதிதிராவிடர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களை பட்டியல் இனத்தவர் என்று அழைக்குமாறு கோரிக்கை வந்துள்ளது. அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்தபோது அவரது உடல் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் தான் வைக்கப்பட்டிருந்தது. அதனால் சென்னை அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயர் வைக்குமாறு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அதற்கு முதல்வர் கருணாநிதி கூறியதாவது,

பீட்டர் அல்போன்ஸ் 2 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் ஆதிதிராவிடர்களை எப்படி அழைப்பது என்பது குறித்து முடிவெடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். ஆதிதிராவிடர்களை பட்டியல் இனத்தவர் என்று அழைப்பதா அல்லது அவர்கள் வகுப்பைக் குறித்தும் சொல்லிவிட்டு பட்டியல் இனத்தவர் என்று அழைப்பதா என்பது தான் இப்பொழுது உள்ள பிரச்சனை. இது குறித்து நான் என் நண்பர்களோடு கலந்து பேசினேன். நான் என்ன கருதுகிறேன் என்றால் இனி ஆதிதிராவிடர்கள் என்றோ, தலித் என்றோ அழைக்காமல், பட்டியல் இனத்து மக்கள் என்று அழைத்துவிட்டு, அவர்களுடைய வகுப்பை, அவர்கள் ஆதிதிராவிடரா? அல்லது அருந்ததியரா? என்பதை அடைப்புக்குறிக்குள்ளே போட்டுவிட்டு - அதாவது பிராக்கெட்-ல் போட்டுவிட்டு, அவர்களைப் பட்டியல் இன மக்கள் என அழைக்கலாம் என்ற ஒரு கருத்தை நாங்கள் ஏற்கெனவே அமைத்திருக்கின்ற குழுவிடத்தில் கருத்து தெரிவித்துள்ளோம்.

அந்த குழு தன்னுடைய அறிக்கையை விரைவில் வெளியிடும். அது அந்த மக்கள் மனம் மகிழும் வகையில் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு நிச்சயமாக ராஜீவ் காந்தி பெயர் வைக்கப்படும் என்று நான் இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

காங்கிரஸ் சார்பில் தான் வைத்த கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றியதற்கு பீட்டர் அல்போன்ஸ் நன்றி தெரிவித்தார்.

தங்கபாலு வரவேற்பு:

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பெயர் வைக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிககையில் கூறியிருப்பதாவது,

இன்று சட்டப்பேரவையில் காங்கிரஸின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெய்ர வைக்க வேண்டும் என்பதை நிறைவேற்றுமாறு கொறடா பீட்டர் அல்போன்ஸ கேட்டுக் கொண்டார்.

உடனே கருணாநிதி சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் நிச்சயமாக வைக்கப்படும் என்றார். இதற்காக நான் காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Tuesday, January 11, 2011

Brian Mikkelsen, Danish Minister for Economy and Business Affairs today called onG K VASAN Minister of Shipping government of India in his office at

IMPHAL, Jan 6 (PIB): Brian Mikkelsen, Danish Minister for Economy and Business Affairs today called on G K VASANMinister of Shipping government of India in his office at New Delhi.
According to a release of PIB Imphal, both the ministers during the meeting today discussed various issues pertaining to the ongoing negotiations on Indian-European Union Agreement on Maritime Sector, Free Trade Agreement between India and the European Union and cooperation in the field of shipping/maritime sector between the India and Denmark.
The release further mentioned that, senior officers from the Ministry of Shipping were also present during the meeting.
The release of PIB, Imphal further elaborated that, the two sides discussed key areas of bilateral cooperation in shipping/maritime sector and decided on exploring possibilities for cooperation between the two countries in the areas of ship designing, maritime training and education, off-shore wind energy, investment possibilities.
It is also further mentioned that, both the countries stressed the need for taking counter measures against piracy and armed robbery off the coast of Somalia.
On the other hand, Vasan during the meeting informed that, his ministry is in discussion with Ministry of External Affairs/Ministry of Defence to take up a multi pronged approach to dealt with the problem of piracy and armed robbery off the coast of Somalia through increase presence of the navy as also the possibility of presence of a unified force under the command of the UN the release added.
The release further mentioned that, Vasan also highlighted the availability of highly trained manpower, as a result of quality maritime education infrastructure available in India, which could be tapped by the Danish maritime sector. Mikkelsen, while pointing out that the officers from India outnumber officers from any country including Denmark, said that Denmark would outnumber officers from any country including Denmark, said that Denmark would welcome Indian officers since it is mutually beneficial to both countries and the discussion ended with both side agreeing to carry forward to cordial cooperation in the years ahead the release added.

விலைவாசி உயர்வு: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

புது தில்லி, ஜன.11: விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியன குறித்து பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்தினார். விலைவாசியைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், சரத் பவார், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் புதன்கிழமையும் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது.

டிசம்பர் 25-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பணவீக்கம் 18.32 சதவீதமாக உயர்ந்தது. வெங்காயம், பால், இறைச்சி ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. விலைவாசியைக் கட்டுப்படுத்தி பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

வெங்காயத்தின் விலையைக் குறைக்க இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் வெங்காயத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதேயன்றி பழைய நிலைக்குத் திரும்பவில்லை. மூன்று வாரங்களில் வெங்காயம் குறையும் என்று அரசு அறிவித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் வெங்காயத்தின் விலை குறைந்தபாடில்லை.

காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு ஏதும் செய்ய இயலாது என்று வேளாண் அமைச்சர் சரத் பவார் திங்களன்று கருத்து தெரிவித்திருந்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் விற்பனைக்கு வந்ததால் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை | 50 முதல் | 55 வரை விற்கப்பட்டது. பாகிஸ்தானின் உள்நாட்டு தேவைக்கு வெங்காயம் தேவைப்படுவதால் இப்போதைக்கு பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என்றே தோன்றுகிறது.

hai friends

new blogg very soon good picture we r uploading
ok