Monday, December 31, 2012

அதிமுக – திமுக இரண்டையும் விரட்டுவோம் – தமிழர்கள் சூளுரை


அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்: திமுக - அதிமுக கட்சிகளின் தனி நபர் விசுவாசம் என்கின்ற உள்ளுணர்வோடு இப் பதிவினைப் படிக்க நினைப்பவர்களுக்குப் பொருத்தமான பதிவு இது அல்ல! தயவு செய்து உங்கள் விசுவாசங்களைக் கொஞ்ச நேரம் தூரத் தள்ளி வைத்து விட்டு; மனச்சாட்சிக்கு நேர்மையான முறையில் இப் பதிவினை நீங்கள் உற்று நோக்கினால் நன்றாக இருக்கும் அல்லவா! தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய தாய்த் தமிழக உறவுகளே! 
ஈழத்தின் தெருக் கோடியில் கிடக்கும் இவனுக்கு உங்கள் தாய்த் தமிழகம் மீது ஏன் இந்த அக்கறை! "இந்தப் பதிவை அழித்து விட்டு பொத்திட்டுப் போடா நிரூபன்" என்று நீங்கள் என் மீது கோபப்படலாம்! இலங்கையின் ஊடகச் சுதந்திரம் பற்றி நீங்கள் யாவரும் அறியாததல்ல! இலங்கையில் "ஆச்சி மாற்றம் வேண்டும்" என்று எங்கள் கொள்ளுப் பாட்டியைப் பார்த்து நாங்கள் கேட்கும் போது அருகே ஒரு சீருடை தரித்த கொஞ்சம் தமிழ் பேசத் தெரிந்த இராணுவ வீரன் நின்றால், "ஆட்சி மாற்றம் வேண்டும்" என நாங்கள் கூறியதாக நினைத்து எங்கள் கதையினையே முடித்து விடுவார்கள். இது பற்றி நீங்கள் அறியாதல்ல. உங்கள் ஆத்திரங்கள், கட்சி விசுவாசங்கள், பொங்கியெழும் உணர்ச்சியலைகள் என அனைத்தையும் கொஞ்சம் தூரத் தள்ளி வைத்து விட்டு இனிப் பதிவிற்குள் நுழைவோமா?
ஐயா ஆட்சியில் இருக்கும் போது செய்யும் மரண மொக்கைகளை அம்மா டீவிக்குள்ளால் பார்த்து சிரிப்பார்! அம்மா ஆட்சியில் இருக்கும் போது பண்ணும் காமெடிகளை ஐயா பார்த்து சிரிப்பார்!

எங்களின் தமிழ் மன்னர்கள், மூதாதையர்கள் தங்களின் வளமான நாட்டில் ஆட்சி செலுத்திய காலத்தில் நிதிப் பற்றாக்குறை நிலவிய பல அண்டை நாடுகளுக்குத் தம் திறை சேரியிலிருந்து பணத்தினைப் பெற்று உதவி செய்திருக்கிறார்கள். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் விஜய நகர நாயக்கர்கள் காலத்தில் இலங்கை, கம்போடியா, சீனா, தாய்லாந்து, எனப் பல நாடுகளுக்குத் தம்மாலான உதவிகளை எம் மன்னர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆட்சியில் உள்ளோரின் வசமிருக்கும் எம் தமிழகத்தின் திறைசேரியினைப் பரிசோதித்துப் பார்த்தால் பல கோடிக் கணக்கான பணம் மாயமாக இருக்கும். மக்களிடம் ஓட்டுப் பெற்று மக்களிடம் வரி வாங்கி மக்களின் அபிவிருத்திக்கென்று ஒதுக்கப்படுகின்ற பணம் அரசியல்வாதிகளின் இரகசியச் செயற் நடவடிக்கைகளால் சூறையாடப்பட்டு அவர் தம் சுய நலத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
இன்றும் நாளையும் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் வரும் திமுக கட்சியும், அதிமுக கட்சியும் பண பலத்தால் தம் கரங்களை வலுப்படுத்தி மக்கள் பணத்தினைச் சூறையாடி வெளித் தெரியாத பல இரகசிய ஊழல்கள் செய்து தம் பிள்ளைகளையும், தம் வம்சத்தினையும் மாத்திரம் வாழ வைக்கின்ற அதி உன்னதமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இது நாம் அனைவரும் அறியாத ஒன்றல்ல! அப்படியானால் இந்த அரசியல்வாதிகளை நம்பி ஓட்டளித்த மக்களின் நிலமை என்பது சந்தேகமேயில்லை கேள்விக் குறிதான்! ஓட்டளித்த மக்கள் அதே நாற்றம் வீசும் தெருக்களிலும், தூசுகள் வந்து மூக்கை அடைத்து தொற்று நோயினை உருவாக்கும் சுகந்தமற்ற காற்றினையும், போதிய வசதிகள் இல்லாத போக்குவரத்தினையும், ஏன் அனைத்துத் துறைகளிலும் பின் தங்கிய வளங்களையும் தான் தம் தேவைகளுக்காக தமிழகத்தில் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

எங்கு பார்த்தாலும், சிபாரிசுகளும், ஊழல்களும் எம் பின்னே மலிந்திருந்து எம் சந்ததியின் வாழ்வினை சூறையாடிச் செல்கின்றது. கலைஞரையும், ஜெயாவையும் நாம் நம்பி எத்தனை நாளைக்குத் தான் அடிமைகளாக வாழ முடியும்? ஒரு எளிய உதாரணம் இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பதாக உலக வங்கியிடமிருந்து ஐம்பது மில்லியன் ரூபாக்களை நிதியாகப் பெற்ற இந்தியாவின் குஜராத் மாநிலம் இன்று உலக வங்கிக்கே இந்தத் தொகையினைப் போன்று மூன்று அல்லது நான்கு மடங்கு அளவுள்ள பெரிய தொகையினை உதவி செய்யுமளவிற்கு வளர்ச்சியடைந்து சிறப்பான நிலையில் இருக்கின்றது. ஆனால் எம் தாய்த் தமிழகத்தின் நிலமை என்ன? கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட உலகின் மிகத் தலை சிறந்த அபிவிருத்தியடைந்த - பொருளாதாரத்தில் செழிப்புற்று விளங்கும் மாநிலங்கள் வரிசையில் குஜராத் மாநிலமும் முதல் பத்து இடங்களைப் பெற்ற உலகளாவிய மாநிலங்கள் பட்டியலினுள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் பதவியேற்று குறுகிய காலப் பகுதியானாலும் எம் தமிழகத்தில் ஏதாவது முன்னேற்றம் நடந்ததா? கலைஞரின் பெயர் எங்கெங்கே மணக்கின்றதோ, அங்கெல்லாம் தேடித் தேடி தன் கைங்கரியத்தினைக் காட்டிக் கௌரவத்தினை நிலை நாட்ட முயற்சி செய்திருக்கிறார். இதனால் என்ன பயன்? எம் முன்னே வாழ்ந்த தமிழ் மன்னர்கள் செய்த பணிகளுக்கும், இன்று ஆட்சியில் உள்ளோர்கள் செய்கின்ற பணிகளுக்கும் எவ்வளவு வேறுபாடு? ஏன் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது, தமிழகத்தில் இடம் பெறும் அபிவிருத்தி அல்லது முன்னேற்றப் பாதையினை நோக்கிய செயற்பாடுகள் மந்த கதியில் தானே இடம் பெறுகின்றன. அரசியலுக்கு வருகின்ற அனைவருமே நாளடைவில் மிகப் பெரும் செல்வந்தர்களாக அனைத்துத் துறைகளையும் விலை கொடுத்து வாங்குகின்றளவிற்கு வளர்ந்து விடுகின்றார்கள். ஏன் எமது தமிழ் சினிமா கூட இன்று உதய நிதி மாறன், அழகிரி எனப் பல அரசியல் ஜாம்பவான்களின் கையில் அகப்பட்டுத் தானே தன் நகர்வினை மேற் கொள்கின்றது.

இவர்கள் அனைவரும் பிறக்கும் போது செல்வத்துடனா பிறந்தார்கள்? இல்லையே! இன்னோர் விடயம் ஆசியாவின் முதல் பத்துப் பணக்காரர்கள் வரிசையில் கலைஞர், ஜெயா, உதயநிதிமாறன், தயாநிதிமாறன் ஆகியோரின் பெயர்களும் வந்து கொள்கின்றன. அவர்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களின் நிலமை? அதே தெருப் புழுதியினைச் சுவாசித்து செத்தொழிவது தானே? காலங் காலமாக இப்படியான அரசியல்வாதிகள் ஆட்சி பீடமேறி தம் வாழ்வை மட்டும் செழிப்படையச் செய்து விட்டு மக்கள் பணமெங்கே என வினா எழுப்பும் போது திறைசேரியில் பல திருட்டுக் கணக்குகளை உருவாக்கி அனைத்தையும் பேலன்ஸ் பண்ணி விட்டுச் செல்கின்றார்கள். ஆனால் மக்களாகிய எமது நிலமை? சரி எம்மைப் பற்றித் தான் கவலை கொள்வதனை விடுவோம்? எம் சந்ததியின் நிலமை? எம் பிள்ளைகள் எம் வம்சங்கள் என அனைவருமே இந்த ஏமாற்று அரசியல்வாதிகளின் கீழ் வாழ்ந்து செத்தோழிவது தானா எம் அனைவரினதும் நோக்கம்?
"அம்மா ஜெயலலிதா மடிக் கணினி கொடுக்கிறா, இதனால் பிள்ளைகளின் கம்பியூட்டர் அறிவு வளர்கிறது” என்று யாராவது சொன்னால் அதனை விட முட்டாள்த்தனமான சிந்தனை உலகத்தில் கிடையாது. நாம் எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா? எம் சந்ததியின் வளமான எதிர்காலம் பற்றி? எம் நாட்டின் எம் தமிழக மாநிலத்தின் எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திருக்கிறோமா? கட்சிக்கு விசுவாசமாக இருப்பதும், கருத்துச் சுதந்திரம் இருந்தும் தமிழகத்தில் மௌனமாக இருந்து மூன்று வேளையும் மூக்கு முட்டச் சாப்பிட்டு விட்டு தூங்குவதையும் அன்றாடம் வேலைக்குப் போய் உழைத்து இந்த ஏமாற்று அரசியல்வாதிகளின் கீழ் வாழ்வதனையும் தவிர நாம் எம் வாழ்வில் ஏதாவது பயன்மிக்க சிந்தனைகளை நினைத்திருப்போமா? இல்லையே! ஏன் எம்மால் முடியாது?
இன்று தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும் நமக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு என்ன தெரியுமா? கருத்துச் சுதந்திரம் - பேச்சுச் சுதந்திரம்! ஒருவன் வன்முறையினைத் தூண்டும் வகையில் பேசினால் அவனைக் கைது செய்து காவலில் அடைக்க இந்தியாவில் சட்டம் உண்டு. (இதற்கு உதாரணமாக கடந்த வருடம் சீமான் அவர்களுக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை குறிப்பிடலாம்) ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் தமது தலை விதியை அல்லது தம்மை ஆள்பவரைப் பற்றிய தெரிவிற்குப் பரிபூரண சுந்தந்திரம் உண்டல்லவா?

இன்று பல ஆயிரம் பதிவர்கள் இருக்கின்றோம். எம் வலைப் பூக்கள் ஊடாக தமிழகத்தின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும்? எம்மையெல்லாம் ஆளுகின்ற அரசியல்வாதி எத்தகைய நோக்கில் செயற்பட வேண்டும் எனப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாதா? எம் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாதா?வெறுமனே மொக்கை போடுவதற்கும் கும்மி அடிப்பதற்கும் தான் வலைப் பூ எனும் ஊடக ஆயுதம் இருக்கிறது எனும் கருத்தினைத் தூரத் தள்ளி எறிந்து விட்டு எம் நாட்டின் எதிர்காலம் பற்றிய சிந்தனையினைத் தூண்டும் வகையில் எம் வலைப் பூக்களை மாற்ற முடியாதா?

எம் தமிழக மாநிலம் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் நன்கு படித்த கல்வியறிவில் உயர்ந்த அதே நேரம் தொலை நோக்குப் பார்வையுடைய ஊழல் செய்யாத அரசியல்வாதி உருவாக வேண்டும்! இன்றைய காலத்தில் ஆட்சியில் இருப்போரைப் பற்றி நாம் எழுதி அவர்களை மாற்ற வேண்டும் என நினைத்தால் ஒரு வேளை எம் வீடுகளுக்கு ஆட்டோ வரும் என உங்கள் மனங்களில் அச்சம் நிகழலாம்! ஆனால் நாளைய எம் சந்ததிகளின் மனங்களில் ஒரு நல் வாழ்வினையும், தாய் மண்ணின் மீதான வளர்ச்சியினையும் நோக்கிய சிந்தனைகள் உருவாகும் வண்ணம் எம்மால் வலைப் பூக்கள்,சஞ்சிகைகள், ஊடகங்கள் ஊடாகப் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா? எத்தனை காலம் தான் ஊழல் நிறைந்த பயனற்ற ஆட்சியின் கீழ் வாழ்ந்து தமிழக மக்களின் எதிர்காலத்தைத் தொலைப்பது? நாம் நினைத்தால் எம்மை ஆள்வதற்குப் புதிய ஒருவரைத் தெரிவு செய்யலாம் அல்லவா!

சினிமாவில் நடித்தோரும், சிறப்புரையாற்றி காலத்தினைக் கவிதை பாடி - கடிதம் எழுதி வீணடிப்போரையும் அரசியல்வாதியாக்கி மகிழ்வதனை விடுத்து எமக்கான மாற்றுத் தேவை வேண்டும் என இளைஞர்கள் அனைவரும் தமிழகம் தழுவிய ரீதியில் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா? நாங்கள் தான் எம் வளமான நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கவில்லை என்றாலும், எம் சந்திகளாவது தம் எதிர்காலத்தில் நலமோடு நல்வாழ்வு வாழ, தமிழகத்தில் அபிவிருத்திப் புரட்சியின் கீழ் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முன்னேற உதவி செய்ய முடியாதா? சிந்தியுங்கள்! உங்கள் சிறகுகளை இன்றே விரியுங்கள்!

இன்றைய விவாத மேடையினூடாக ஒரு விவகாரமான விடயத்தினைக் கையிலெடுத்திருக்கிறேன். அது தான் கலைஞரையும் ஜெயலலிதாவையும், அவர்களின் வாரிசுகளையும் காலாதி காலமாக ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பதை விடுத்து, எம்மால் முடிந்த வரை நாட்டின் நலனுக்காய் பாடுபடும் நன்கு படித்த - தொலை நோக்குப் பார்வையுடைய அரசியல்வாதியினை உருவாக்குவதற்குப் பாடுபட முடியாதா? இன்று இல்லையென்றாலும், எம் வருங்காலச் சந்ததிகள் வாழ்வானது சிறப்படையும் வண்ணம் இந்தக் கொடூர சூறையாடும் ஆட்சியினை அகற்றி நல்லாட்சி மலரும் வண்ணம் நாம் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா? ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் உங்கள் நாற்று வலையின் விவாத மேடை மீண்டும் உங்களுக்காய் திறந்திருக்கிறது! உங்கள் காத்திரமான கருத்துக்களை முன் வைப்பதோடு, எம் தமிழகத்தில் கருத்துப் புரட்சி செய்யும் வண்ணம் எம் வலைப் பூக்களையும் நாம் பயன்படுத்தலாம் அல்லவா?
எண்ணம் - எழுத்து: செல்வராஜா நிரூபன்!
தயவு செய்து இப் பதிவினை அனுமதியின்றி யாரும் காப்பி பேஸ்ட் செய்து உங்கள் தளங்களில் வெளியிட வேண்டாம்! 
தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்!
பிற் சேர்க்கை: இப் பதிவிற்கான படங்களைத் தன் கை வண்ணத்தால் கணினி வரை கலை மூலமாக அழகுற வடிவமைத்தவர் சகோதரன் "நிகழ்வுகள்" வலைப் பதிவின் சொந்தக்காரர் "கந்தசாமி" அவர்கள்! அவருக்கு இந் நேரத்தில் என் உளமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் என் சார்பிலும், உங்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புதிய வருடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் தீர்மானம் எடுப்பார்கள். ஏன் நாம் அனைவரும், நமது அரசியலில் இளைய தலைமுறையினர் வர வேண்டும் என ஓர் தீர்மானம் எடுக்க கூடாது?

Sunday, December 9, 2012

90% இந்தியர்கள் இடியட்ஸ் என்கிறார் மார்க்கண்டேய கட்ஜூ


90% இந்தியர்கள் இடியட்ஸ் என்கிறார் மார்க்கண்டேய கட்ஜூ


டெல்லி: இந்தியாவில் 90% இந்தியர்கள் இடியட்ஸ்களாக மதத்தின் பெயரால் சொல்லப்படுபவற்றை அப்படியே நம்புகிறவர்களாக இருக்கின்றனர் என்று இந்தியன் பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய கட்ஜூ, 90% இந்தியர்கள் முட்டாள்கள்தான். அவர்களது மூலை அவர்களின் தலையில் இருப்பதே கிடையாது. அதனால்தான் உங்களை வேறு ஒருவரால் எளிதாக கையாள முடிகிறது.
ரூ2 ஆயிரத்துக்காக டெல்லியில் இனமோதலில் ஈடுபட்டவர்களும் இருக்கின்றனர். வழிபாட்டின் பெயரால் நீங்கள் ஏமாற்ரப்படுகிறீர்கள். நாட்டில் 1857-க்கு முன்பு இப்படியான மத மோதல்கள் இருந்தது இல்லை. ஆனால் தற்போது 80% இந்துக்களும் 80% இஸ்லாமியர்களும் மதவாதிகளாக இருக்கின்றனர். இது கசப்பான உண்மைதான்.
இதேபோல் இந்தி மொழி என்பது இந்துக்களுடையது. உருது மொழி என்பது முஸ்லிம்களுடையது என்ற கருத்தும். நமது முன்னோர்களும் உருது மொழி படித்தோர்தான்.. ஆனால் உங்களை எளிதாக முட்டாளாக்குகின்றனர் என்றார் அவர்

Saturday, October 27, 2012

Sunday, September 30, 2012

இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜ் மீண்டும் வெற்றி!


சென்னை: தமிழக இளைஞர் கங்கிரஸ் தலைவராக யுவராஜ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்ய வாக்கு எண்ணிக்கை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களை தவிர மற்றவர்கள் சத்திய மூர்த்திபவன் வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொருளாளர் லிஜூ முடிவுகளை அறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில், யுவராஜ் 6,557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3,657 வாக்குகள் பெற்ற விஜய் இளஞ்செழியன் துணை தலைவராகவும், 2,119 வாக்குகள் பெற்ற நாசே ஆர்.ராஜேஷ் மாநில பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற பதவிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும் என்றார்.
தமிழக இளைஞர் கங்கிரஸ் தலைவராக மீண்டும் வெற்றி பெற்ற யுவராஜூக்கு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் மாநில தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக வெற்றி பெற்ற யுவராஜ் கூறுகையில், எனக்கு வாக்களித்த தொண்டர்களுக்கும், எனது வெற்றிக்கு பாடுபட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Thursday, August 23, 2012

செல்வாக்கு மிகுந்த பெண்களில் சோனியா 6வது இடம் பிடித்தார்: போர்ப்ஸ் இதழ் பட்டியல் வெளியீடு

நியூயார்க்: உலகிலேயே செல்வாக்குள்ள பெண்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 6வது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'போர்ப்ஸ்' இதழ், உலகிலேயே செல்வாக்கு, அதிகாரமுள்ள 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 7வது இடத்தை பிடித்திருந்தார். இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் இதழ் நேற்று வெளியிட்டது. அதல் சோனியா 6வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், பெப்சி தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி 12வது இடத்தையும், சிஸ்கோ சிஸ்டம்ஸ் தலைவர் பத்மஸ்ரீ வாரியர் 58வது இடத்தையும், ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் 59வது இடத்தையும் பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார் 80வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

சோனியா பற்றி குறிப்பிடுகையில், 'காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் தலைவராக சோனியா செயல்பட்டு வருகிறார். உடல்நலக் குறைவால் அறுவை சிகிச்சை செய்த பின்பும், கட்சி மற்றும் அரசு நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுகிறார். அசாம் கலவரத்தை திறம்பட கையாண்டது உள்பட பல்வேறு பிரச்னைகளை திறம்பட சமாளிக்கிறார்' என்று கூறியுள்ளது.

செல்வாக்குள்ள பெண்களின் பட்டியலில் தொடர்ந்து 2வது ஆண்டாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரை 'இரும்பு பெண்' என்று போர்ப்ஸ் இதழ் பாராட்டி உள்ளது. 2வது இடத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சின் மனைவி மெலிண்டா கேட்ஸ் 4வது இடத்தையும் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் 7வது இடம் பிடித்துள்ளார்.

எம்.பி.க்களுக்கு சோனியா அறிவுரை

புதுடில்லி : நிலக்கரி சுரங்க மோசடி தொடர்பாக எதிர்கட்சிகள் பார்லிமென்ட்டை முடக்கியுள்ளன. மேலும் இவ்விவகாரத்தில் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்., தலைவர் சோனியா தனது கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பயப்படாமல் உடனுக்கு உடன் தக்க பதில் கொடுக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். ஊழல் தொடர்பாக காங்., மீது பா.ஜ. கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில் சோனியா தனது எம்.பி.க்களுக்கு இந்த அறிவுரையை வழங்கி இருக்கிறார்.

Tuesday, August 21, 2012

  தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் : சோனியாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு|- Dinakaran

  தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் : சோனியாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு|- Dinakaran

ராஜீவ் காந்தியின் 68வது பிறந்த நாள்... நினைவு கூர்ந்த காங்கிரஸ்


டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 68வது பிறந்த நாளையொட்டி இன்று அவருக்கு நாடு முழுவதும் காங்கிரஸார் மலரஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்திக்கு இன்று 68வது பிறந்த நாளாகும். இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது சமாதியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், ராஜீவின் மனைவி சோனியா காந்தி, மகள் பிரியங்கா வத்ரா, அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஏராளமான காங்கிரஸாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதேபோல பல்வேறு தலைவர்களும் ராஜீவ் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்திலும் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். சென்னை அடுத்த பல்லாவரம் நகராச்சி இக்கு உட்பட குரோம்பட்டை  தபால் 
நிலையம் அருகில் உள்ள அமரர் ராஜீவ்காந்தி முழுஉருவ சிலை கு மாலை அணிவிக்கப்பட்டது . 
நிகழ்ச்சி பல்லாவரம் நகர காங்கிரஸ் சார்பாக செயப்பட்டது 

Monday, August 13, 2012

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு 'ஆப்பு' தயாராகிறது?

டெல்லி: மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் மற்றும் மறைந்த தலைவர்களை விமர்சனம் செய்து பேசியதற்காக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிட ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஜுலை 15ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. அதில் பேசிய முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மறைந்த தலைவர்கள், பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம் மற்றும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் ஆகியோரை விமர்சித்துப் பேசினார்.
இது குறித்து சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு, கவனத்துக்கு கொண்டு சென்றனர். இந்தக் குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியும், செயலாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் ஓராவும் உள்ளனர்.
மேலும் இதன் உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் சுசில்குமார் ஷிண்டே, குலாம் நபி ஆசாத், மிஜோராம் முன்னாள் முதல்வர் முகுத் மித்தி ஆகியோர் உள்ளனர்.
இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கடந்த மாதம் 17ம் தேதி கூடி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய பேச்சை ஆராய்ந்து அவருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், மறைந்த தலைவர்கள் குறித்தும், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் குறித்தும் நீங்கள் விமர்சனம் செய்து பேசிய பேச்சு பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. இதற்காக, உங்கள் மீது காங்கிரஸ் கட்சி ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு உங்கள் விளக்கத்தை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த இளங்கோவன் எனக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசை பார்த்து வருத்தப்பட்டேன். நான் அது போல பேசவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இளங்கோவன் நேரடியாகவே டெல்லிக்கு சென்று, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால், சோனியா காந்தி அவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.
இளங்கோவனின் விளக்கத்தை ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அடுத்த கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு தனது முடிவை அறிவிக்கும்.
முதல் முறையாக...
தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தமட்டில், இதுவரையில் எந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கும், காங்கிரஸ் கட்சியின் மேலிட ஒழுங்கு நடவடிக்கை குழு இதுபோல நோட்டீசு அனுப்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நோட்டீஸைப் பெற்று சாதனை படைத்துள்ள முதல் ஆள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான்

Saturday, July 28, 2012

17 வது வட்ட காங்கிரஸ் தலைவர் மூர்த்தி குழந்தை விசால் முதல் வருட பிறந்த நாள் விழா




17 வது  வட்ட காங்கிரஸ் தலைவர்  மூர்த்தி குழந்தை  விசால்  முதல் வருட பிறந்த நாள் விழா "

Monday, July 23, 2012

இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி


இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக தேந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி வரும் 25-ம் திகதி புதன்கிழமை பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியி்ட்ட பிரணாப் முகர்ஜி 69 சத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணியின் ஆதரவு பெற்ற முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ. சங்மா 31 சத வாக்குகளைப் பெற்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் வி.கே. அக்னிஹோத்ரி, பிரணாப் முகர்ஜியின் வெற்றியை முறைப்படி அறிவித்தார்.
நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்த இந்தத் தேர்தலில், மொத்தம் 4659 வாக்குகள் பதிவாயின. அவற்றில் செல்லுபடியான 4,578 வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 29 ஆயிரத்து 750 என கணக்கிடப்பட்டது. அதன்படி, பிரணாப் முகர்ஜிக்குக் கிடைத்த வாக்குகள் ஏழு லட்சத்து 13 ஆயிரம் என கணிக்கப்பட்டது. பி.ஏ. சங்மாவுக்குக் கிடைத்த வாக்குகள் 3 லட்சத்து 15 ஆயிரம் என கணிக்கப்பட்டது.
செல்லாத வாக்குகளின் மதிப்பு 18 ஆயிரத்து 221 என கணிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதலில், எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் அகரவரிசைப்படி, மாநில வாரியாக எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. எம்.பி.க்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 748 வாக்குகளில், பிரணாபுக்கு 527 வாக்குகள் கிடைத்தன. சங்மாவுக்கு 206 வாக்குகள் கிடைத்தன.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவுடன் சங்மா களம் இறங்கினார்

ஆளும் கூட்டணியில் உள்ளவர்கள் கூட தனக்கு வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக சங்மா அவர்கள் கூறிவந்த நிலையில், இன்றைய முடிவுகள் அதற்கு எதிர்மாறாக இருந்தன.
கர்நாடகத்தில், சங்மாவுக்குக் கிடைக்க வேண்டிய பாஜக வாக்குகளில் சில பிரணாப் முகர்ஜிக்குக் கிடைத்திருக்கின்றன. இது பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலையில் முடிவுகள் வெளியான நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் பல்வேறு தலைவர்கள் பிரணாப் முகர்ஜியின் இல்லத்துக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
பிரணாப் முகர்ஜிக்கு, ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமன்றி, எதிர்க்கட்சி அணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவளித்தன.
சங்மாவுக்கு அதிமுக, பாஜக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. தேமுதிக, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன.
தேர்தலில் தோல்வியைடந்த பி.ஏ. சங்மா, பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதேநேரத்தில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நாடு இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர்

இன்னும் 2 இரண்டுகளில் நடைபெறும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கடும் சவால்களை சந்திக்கும்
'இன்னும் 2 இரண்டுகளில் நடைபெறும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கடும் சவால்களை சந்திக்கும்': அவதானிகள்

நிதியமைச்சராக இருந்த காலத்தில் அவரது செயற்திறன் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும் பிரணாப் முகர்ஜி, ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் மிக அனுபவமும் செல்வாக்கும் மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்துவந்துள்ளார்.
76 வயதான முகர்ஜி, 40 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியால் மீண்டும் தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் ஆட்சியமைக்கக் கூடிய விதத்தில் பெரும்பான்மை பலத்தை பெறமுடியுமா என்ற கேள்விகள் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் அண்மைக் காலமாக கடுமையான பிரச்சனைகளை சந்தித்துவருகின்றது.
இந்த நிலையில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனால், யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிப்பதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா படீலின் பதவிக்காலம் ஜூலை 24ம் திகதியுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசியலில் குடியரசுத் தலைவர் பதவி என்பது பெரும்பாலும் பெயரளவு தலைமைப் பொறுப்புதான் என்றாலும், சில முக்கிய சந்தர்ப்பங்களில் குடியரசு தலைவர் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி


இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக தேந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி வரும் 25-ம் திகதி புதன்கிழமை பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியி்ட்ட பிரணாப் முகர்ஜி 69 சத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணியின் ஆதரவு பெற்ற முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ. சங்மா 31 சத வாக்குகளைப் பெற்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் வி.கே. அக்னிஹோத்ரி, பிரணாப் முகர்ஜியின் வெற்றியை முறைப்படி அறிவித்தார்.
நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்த இந்தத் தேர்தலில், மொத்தம் 4659 வாக்குகள் பதிவாயின. அவற்றில் செல்லுபடியான 4,578 வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 29 ஆயிரத்து 750 என கணக்கிடப்பட்டது. அதன்படி, பிரணாப் முகர்ஜிக்குக் கிடைத்த வாக்குகள் ஏழு லட்சத்து 13 ஆயிரம் என கணிக்கப்பட்டது. பி.ஏ. சங்மாவுக்குக் கிடைத்த வாக்குகள் 3 லட்சத்து 15 ஆயிரம் என கணிக்கப்பட்டது.
செல்லாத வாக்குகளின் மதிப்பு 18 ஆயிரத்து 221 என கணிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதலில், எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் அகரவரிசைப்படி, மாநில வாரியாக எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. எம்.பி.க்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 748 வாக்குகளில், பிரணாபுக்கு 527 வாக்குகள் கிடைத்தன. சங்மாவுக்கு 206 வாக்குகள் கிடைத்தன.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவுடன் சங்மா தேர்தலில் களம் இறங்கினார்
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவுடன் சங்மா களம் இறங்கினார்
ஆளும் கூட்டணியில் உள்ளவர்கள் கூட தனக்கு வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக சங்மா அவர்கள் கூறிவந்த நிலையில், இன்றைய முடிவுகள் அதற்கு எதிர்மாறாக இருந்தன.
கர்நாடகத்தில், சங்மாவுக்குக் கிடைக்க வேண்டிய பாஜக வாக்குகளில் சில பிரணாப் முகர்ஜிக்குக் கிடைத்திருக்கின்றன. இது பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலையில் முடிவுகள் வெளியான நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் பல்வேறு தலைவர்கள் பிரணாப் முகர்ஜியின் இல்லத்துக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
பிரணாப் முகர்ஜிக்கு, ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமன்றி, எதிர்க்கட்சி அணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவளித்தன.
சங்மாவுக்கு அதிமுக, பாஜக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. தேமுதிக, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன.
தேர்தலில் தோல்வியைடந்த பி.ஏ. சங்மா, பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதேநேரத்தில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நாடு இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர்

இன்னும் 2 இரண்டுகளில் நடைபெறும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கடும் சவால்களை சந்திக்கும்
'இன்னும் 2 இரண்டுகளில் நடைபெறும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கடும் சவால்களை சந்திக்கும்': அவதானிகள்
நிதியமைச்சராக இருந்த காலத்தில் அவரது செயற்திறன் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும் பிரணாப் முகர்ஜி, ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் மிக அனுபவமும் செல்வாக்கும் மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்துவந்துள்ளார்.
76 வயதான முகர்ஜி, 40 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியால் மீண்டும் தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் ஆட்சியமைக்கக் கூடிய விதத்தில் பெரும்பான்மை பலத்தை பெறமுடியுமா என்ற கேள்விகள் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் அண்மைக் காலமாக கடுமையான பிரச்சனைகளை சந்தித்துவருகின்றது.
இந்த நிலையில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனால், யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிப்பதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா படீலின் பதவிக்காலம் ஜூலை 24ம் திகதியுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசியலில் குடியரசுத் தலைவர் பதவி என்பது பெரும்பாலும் பெயரளவு தலைமைப் பொறுப்புதான் என்றாலும், சில முக்கிய சந்தர்ப்பங்களில் குடியரசு தலைவர் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Thursday, July 19, 2012

பிரதமர் பதவியை நெருங்குகிறார் ராகுல் ; ‘ உரிய நேரத்தில் வருவேன் ’-என்கிறார்


புதுடில்லி: கட்சியும், அரசாங்கமும் கெட்டப்பெயரை சுமந்து அல்லல்படும் இந்நேரத்தில் ராகுலை உயரிய பொறுப்புக்கு கொண்டு வர காங்., திட்டமிட்டுள்ளது. இதன்படி உயர் பொறுப்புக்கு வரும் முடிவை எடுத்து விட்டேன் என்றும், உரிய நேரத்தில் காங்., கட்சி தலைமை முடிவை எடுக்கும் என்றும் இன்றயை பேட்டியில் ராகுல் சுருக்கென 2 வரி பதிலில் தெரிவித்தார்.

ஊழல், விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி என்ற பல பிரச்னைகளால் பிரதமர் பெயர் பெருமளவுக்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்., கட்சியில் மாற்றம் வருமா ? பிரதமர் பதவிக்கு புதிய முகம் அமர்த்தப்படுமாக என்ற பேச்சு தற்போது எழுந்திருக்கிறது. இதனையடுத்து ராகுல் நோக்கி அரசியல் பார்வை திரும்பியுள்ளது. மேலும் ராகுலை உயரிய பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என காங்., மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். 

இந்நிலையில் இன்று ராகுல் அளித்த பேட்டியில்; நான் எதிர்காலத்தை திட்டமிட்டு விட்டேன். அரசிலோ அல்லது கட்சியிலோ உயர் பொறுப்புக்கு வருவது குறித்தும் முடிவு எடுத்து விட்டேன். இருப்பினும் என்ன மாதிரியான பொறுப்பு என்பதை காங்., மூத்த தலைவர்கள் சரியான நேரத்தில் முடிவு எடுப்பார்கள். இவ்வாறு ராகுல் தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மாற்றம் இருக்கும் என டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, July 18, 2012

மம்தாபானர்ஜி ஆதரிப்பதால் பிரணாப் முகர்ஜிக்கு 7 லட்சம் ஓட்டு கிடைக்கும்


ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியும், பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளராக பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகிறார்கள். பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கின்றன. 

காங்கிரசுக்கு அடுத்தப்படியாக அந்த கூட்டணியில் உள்ள 2-வது பெரிய கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் நேற்று தனது சஸ்பென்சை உடைத்து பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளது. இது தவிர மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கின்றன. 

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் ஆதரவு கொடுக்கிறது. தேசிய ஜன நாயக கூட்டணியைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா கட்சிகளும் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கின்றன. பிரணாப் முகர்ஜி வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதன் மூலம் அவருக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும். 

ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 776 எம்.பி.க்களும், 4120 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப் போடுகிறார்கள். மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகள் மதிப்பிடப்படுகின்றன. அதன்படி மொத்தம் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5,49,408 ஆகும். 

அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்களின் மொத்த ஓட்டு மதிப்பு 5,49,474 ஆகும். இரண்டையும் சேர்த்தால் ஜனாதிபதி தேர்தலில் பதிவாகும் மொத்த ஓட்டுக்களின் மதிப்பு 10,98,882, இதில் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றிக்கு 5,49,442 ஓட்டுகள் தேவை. ஆனால் பிரணாப் முகர்ஜி இதைவிட கூடுதல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். 

திரிணாமூல் காங்கிரசும் ஆதரிப்பதால் சுமார் 7 லட்சம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவருக்கு மொத்தம் 52.9 சதவீகித ஓட்டுகள் கிடைக்கும். அதே சமயம் பி.ஏ. சங் மாவை பாரதீய ஜனதா, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் மட்டும் ஆதரிப்பதால் அவருக்கு 3,04,785 ஓட்டுகள் கிடைக்கும். இது 34 சதவீத ஓட்டுகள் ஆகும். தேர்தலை புறக்கணிக்கும் கட்சிகள், முடிவு அறிவிக்காத சிறிய கட்சிகளிடம் 13 சதவித ஓட்டுகள் உள்ளன.

தக்க சமயத்தில் காங்கிரஸ் தலைவர் ஆவார் ராகுல்: திக்விஜய்சிங் பேட்டி

காங்கிரஸ் கட்சியின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என அக்கட்சியில் பேசப்பட்டு வரும் நிலையில், கட்சியின் தலைவராக அவர் உரிய நேரத்தில் பதவி ஏற்பார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் கூறியுள்ளார். 

2014ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்ப்பாளராக நிறுத்தப்படுவார் என்று கட்சியில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. 

அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என முன்னிலைப்படுத்தி பேசப்பட்டு வருவது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உதவுமா திக்விஜய் சிங்கிடம் நிருபர்கள் கேட்டனர். 

இதற்குப் பதிலளித்த திக்விஜய் சிங்,  ‘சரியான நேரத்தில் கட்சியின் தலைமை ஏற்கவும், சிறப்பாக செயல்படவும் தகுதியும் திறமையும் உள்ளவர் ராகுல் காந்தி என முழுமையாக நான் நம்புகிறேன். ஆனால் இவ்விசயம் குறித்து கட்சியின் தலைவர்தான் முடிவெடுக்கவேண்டும். அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. 

2014 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது சோனியா காந்தியே தலைமை ஏற்று செயல்படுவார். எங்கள் குழுவில் செயல்பட்டு வரும் ஒரு முக்கிய நபராக ராகுல் காந்தி உள்ளார். அடுத்த தலைவர் ஆவதில் சந்தேகம் இல்லை. 

அவர் தலைவராக பதவியேற்பது மட்டுமல்ல, அதற்கும் மேல் இன்னும் அதிகம் செயல்பட வேண்டும். கட்சியில் மாணவ மற்றும் இளைஞர் காங்கிரசில் செயல்பட்டு வரும் அவர், காங்கிரசில் முக்கிய பொறுப்புக்கு வரவேண்டும் என்பது பெரும்பான்மையோரின் விருப்பம்’ என்று கூறினார்.

Monday, July 16, 2012

சி.சு.வும், ப.சி.யும் ஒண்ணுதான்... ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டல்!


சென்னை: காங்கிரஸ் கட்சியில், காமராஜர் காலத்திலிருந்தே கோஷ்டிப் பூசல் இருந்து கொண்டுதான் உள்ளது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியமும், பக்தவச்சலமும் தனி கோஷ்டிகளாகத்தான செயல்பட்டனர். சி.சு.வுக்கு தொண்டர்கள் செல்வாக்கு இல்லை, இப்போது இருக்கும் ப.சிதம்பரத்திற்கும் அதேபோல தொண்டர்கள் ஆதரவு கிடையாது என்று பேசியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
காமராஜர் ஆட்சி தேவை என்று ஒரே குரலில் பேசாமல் ஆளாளுக்கு ஒரு குரலில் பேசி வரும் காங்கிரஸார் நேற்று சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் குறித்து சிறப்புரை ஆற்றினார் இளங்கோவன்.
அப்போது அவர் பேசுகையில்,
கோஷ்டி வைத்து அரசியல் நடத்துவதற்கு தகுதியும், திறமையும் வேண்டும். ராஜாஜி, சத்தியமூர்த்தி காலத்திலிருந்து கோஷ்டி அரசியல் இருக்கிறது. ஆனால் அப்போது, அந்த கோஷ்டி அரசியல் கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை.
காமராஜர் இருக்கும்போதும் கோஷ்டி அரசியல் இருந்தது. பக்தகவச்சலம் ஒரு கோஷ்டியாக இருந்தார், சி.சுப்பிரமணியம் இன்னொரு கோஷ்டியாகச் செயல்பட்டார். இப்போது இருக்கும் உள்துறை அமைச்சரைப்போல சி.சுப்பிரமணியமும் மத்திய அரசில் அப்போது முக்கியமானவராக இருந்தார். ஆனால், தொண்டர்களிடம் அவருக்கு இவரைப் போலவே மரியாதை இருக்கவில்லை. அதிகாரிகள் மத்தியில் நல்ல மரியாதை இருந்தது.
ஆனால் சி.சுப்பிரமணியத்தையும், பக்தவத்சலத்தையும் காமராஜருடன் ஒப்பிட முடியுமா? அவர் மக்கள் தலைவர். இவர்கள் வெறும் அரசியல் தலைவர்கள், அவ்வளவே...
கடந்த வாரம் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் பார்த்தேன். வடசென்னைக்கு வருகை தரும் தலைவா வருக, வருக என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் வடசென்னையில் எங்கே விழா நடக்கிறது என்று சொல்லவில்லை. என்ன விழா என்றும் அறிவிக்கவில்லை. காது குத்து விழாவா, வயதுக்கு வந்த விழாவா, கல்யாணமா என சொல்லச் வேண்டாமா? போஸ்டர்கள் அடிப்பதாலும், பேனர்கள் வைப்பதாலும், வழிநெடுக ட்யூப்லைட் போடுவதாலும் பெரிய தலைவர்களாகிவிட முடியாது என்பது சிலருக்குப் புரிவதில்லை.
ஜெயந்தி நடராஜனுக்கு குட்டு
காங்கிரஸில் சிலர், தொணடர்கள் பலம் இருப்பதுபோல பூச்சாண்டி காட்டுகிறார்கள். அதைக் கண்டு பயப்படாதீர்கள். காங்கிரஸில் பல்வேறு கோஷ்டிகள் இருந்தாலும் பெண்மணிகள் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர். அவர்கள் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்கள். புகைப்படங்களில் தலையைக் காட்டுவதற்காக அல்லிராணியாக வலம் வருகின்றனர்.
அமைச்சராகிவிட்டால் தாங்கள்தான் எல்லாம் என்பதுபோல செயல்படுகின்றனர். தமிழகத்துக்கு வந்தால் தலைவர்களைச் சந்திப்பதில்லை. மகளிரணியினரைக் கூட சந்திப்பதில்லை. அதனால் எம்.எல்.ஏ.க்களும் அவர்களை சட்டை செய்வதில்லை.
திமுகவில் அண்ணன் தம்பிச் சண்டை
கோஷ்டிப் பூசல் காங்கிரஸில் மட்டுமில்லை. மற்ற கட்சிகளிலும் இருக்கிறது. ஒரு கட்சியில் அண்ணன்- தம்பி சண்டை வெளிப்படையாக நடக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியில் ஜாதிப் பூசல்
ஒரு பொதுவுடைமைக் கட்சியில் ஜாதிப் பூசல் இருக்கிறது. ஒரு ஜாதிக் கட்சியில் குரு, சிஷ்யன் சண்டை. எனவே காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல் பற்றிப் பேச இவர்களுக்கு தகுதியில்லை.
காமராஜரைக் கேலி பேசியவர்கள், மோசமாக ஆட்சி செய்கிறார்கள். முதல்வர் கொடநாட்டிலிருந்து 18-ம் தேதி மாலையில் வருவார் என்கின்றனர். அவரோ அண்ணாசாலையில் குப்பை இருந்தால்கூட அதை அகற்ற பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். என்னால் ஆட்சி செய்ய முடியவில்லை என்று கடிதம் எழுதுங்களேன். அதற்கு உடனடியாகப் பதில் கிடைக்கும்.
திராவிடக் கட்சிகள் காலை வாரும் கட்சிகளாகத்தான் இருக்கின்றன. புதிதாக வளர்ந்து வருபவர்களும் அதே பாணியில்தான் இருக்கிறார்கள். தமிழகத்துக்கு விடிவு காலம் காங்கிரசால் மட்டுமே அமையும் என்றார் இளங்கோவன்.

பெருந்தலைவர் காமராஜர் 110 வது பிறந்தநாள் விழா

பெருந்தலைவர்  காமராஜர்  110 வது பிறந்தநாள்  விழா  
 பல்லாவரம் காங்கிரஸ் சார்பில் chromepet  போஸ்ட்  ஆபீஸ் அருகில் அமைந்துள்ள  பெருந்தலைவர் காமராஜர் சிலைஇக்கு  மலை அணுவிகபட்டது











நிகழ்சிக்கு பல்லாவரம் காங்கிரஸ் தலைவர் சி . கே மூர்த்தி  தலைமை தாங்கினார் . பெருந்தலைவர் காமராஜர் சிலைஇக்கு காமராஜர் சிலை குழு தலைவர் ஆர் .வெங்கடேஷ்  மலை அன்னுவிதார் .                                     விழாவில்  நகர மன்ட உறுப்பினர் வி .ராகவன் , முன்னாள் உறுப்பினர் எ.ரோசிமல்லிக , பி ரவி , ந.ராமசந்திரன் தியாகி.முதையபிள்ளைமுன்னாள் உறுப்பினர் எ எ முருகேசன் நகர காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்  பி ஜே ஆர்  சர்மா  உட்பட பலர் கலந்துகொண்டனர் . விழா  முடிவில் த .சத்தியன் நன்றி கூறினார் .   முன்தாக அனைவர்க்கும் இனிப்பு வழங்கப்பட்டது இனிப்புகளை எல் .சண்முகம் வழங்கினஆர் 

Tuesday, July 10, 2012

ஜனாதிபதி தேர்தலுக்கு முந்தைய இரவு பிரணாபுக்கு சோனியா விருந்து

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 18ம் தேதி இரவு விருந்து கொடுக்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவோடு முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவும் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய நாள் அதாவது வரும் 18ம் தேதி இரவு பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருந்து கொடுக்கிறார். காங்கிரஸ் கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த அவரை கௌரவிக்கும் வகையில் இந்த விருந்து பிரமாண்ட முறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நீண்ட காலமாக கட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் பிரணாப் முகர்ஜிக்கு அவர் ஆசைபட்டது போன்று பிரதமர் பதவி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் காங்கிரஸ் அவரை குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, July 6, 2012

கற்பழிப்புக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது, விஷமத்தனமானது - உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி


டெல்லி: என்மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்புக் குற்றச்சாட்டு உண்மையற்றது, விஷமத்தனமானது, அதற்கு எந்த அடிப்படையும் இல்லை, என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிதே. இவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது செக்ஸ் புகார் கூறி உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒரு பெண்ணையும், அவளது பெற்றோரையும் ராகுல் காந்தி சட்ட விரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அதில் அவர் கூறி இருந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்ததோடு, கிஷோர் சம்ரிதேவுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. அத்துடன் கிஷோர் சம்ரிதே மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அப்பீல் மனுவில் தனது புகார் மீது உயர்நீதிமன்றம் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறி இருந்தார்.
அவரது அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், டி.எஸ்.தாகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததோடு இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராகுல் காந்தி, உத்தரபிரதேச அரசு மற்றும் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் ராகுல் காந்தியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தன் மீது மனுதாரர் கூறியுள்ள புகார் முற்றிலும் தவறானது மட்டுமின்றி விஷமத்தனமானது, தனது புகழைக் கெடுக்கும் உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல்காந்தி.
இத்தகைய பொய்யான குற்றச்சாட்டை வேண்டுமென்றே திட்டமிட்டு தொடர்ந்து சுமத்தி வரும் சம்ரிதே மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை ராணுவத்துக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப்பது வருத்தம் அளிக்கிறது: ஜி.கே.வாசன் பேட்டி

இலங்கை ராணுவத்துக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப்பது வருத்தம் அளிக்கிறது: ஜி.கே.வாசன் பேட்டி

Tuesday, July 3, 2012

பிரதமராக அனைத்து சட்டத்தகுதிகளும் கொண்டவர் சோனியா - கலாம் பேட்டி


நொய்டா: பிரதமராக வருவதற்கு இந்திய அரசியல் சாசன சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் தெரிவித்தார்.
நொய்டாவில் நடைபெற்ற மருத்துவமனை செவிலியர் மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிரதமர் பதவிக்கு சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என்பது குறித்து நான் ஏற்கெனவே எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். சோனியாவை இந்தியக் குடிமகள் என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது.
சோனியாதான் பிரதமராக வேண்டுமென்று அதிக தொகுதிகளை வென்ற கட்சி கூறுமாயின், அவரைத்தான் பிரதமராக குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.
மாறாக, டாக்டர் மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். இதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை. இதை அரசியலாக்குவதும் தேவையற்றது," என்றார் கலாம்.
கலாமின் இந்த தொடர் பேட்டிகள் மற்றும் சோனியா ஆதரவு கருத்துகள் மூலம், வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சோனியா முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

Thursday, June 28, 2012

Pranab files his nomination for Presidential pollAV-India Videos - hindustantimes.com

Pranab files his nomination for Presidential pollAV-India Videos - hindustantimes.com

பிரதமர், சோனியா, ராகுல், கூட்டணி கட்சிகள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்த பிரணாப்!

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸைத் தவிர்த்து காங்கிரஸ் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கூட்டணியில் இல்லாத முலாயம் சிங், லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் புடைசூழ அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக சார்பில் டி.ஆர் பாலு உடனிருந்தார். அதே போல மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் வந்திருந்தார்.
மேலும் தன்னை ஆதரித்து வழிமொழியும் வேட்பு மனு படிவத்தில் முதலாவது கையெழுத்தை பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவிடமிருந்து பிரணாப் முகர்ஜி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வேட்பு மனுவை நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்ள மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் வி.கே. அக்னிஹோத்ரியிடம் இன்று காலை 11 மணிக்கு பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஜூலை 19ம் தேதி நடக்கவுள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூலை 4ம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 22ம் தேதி நடக்கும். அன்றே முடிவுகளும் வெளியாகும்.

Tuesday, June 26, 2012

Congress bids farewell to Pranab Mukherjee

Congress bids farewell to Pranab Mukherjee

SIVAGI'S KARNAN 100 TH DAY POSTER


SIVAGI IS KARNAN RERELEASE 100 TH DAYS


It is probably for the first time in the history of Tamil cinema that a movie runs for a solid 100 days in spite of being a rerelease.
And the honour goes to Karnan, the timeless Mahabharath classic of thespian Sivaji Ganesan, directed by B.R. Panthulu.
For some it is ‘Sivaji magic’, for others it is evergreen songs tuned by Viswanathan-Ramamoorthy and for a few others, it is seeing something from books come alive.
Whatever be the reason, the digitally-enhanced version of Karnan, released by Shanti Chockalingam of Divya Films, is running to packed houses in Chennai, Tiruchy, Kovai, Tirunelveli and Nagercoil and touching the 100-day mark on June 23.
The new version was reworked at a cost of Rs 40 lakh for the last three years by a team of fans of the Nadigar Thilagam and has reportedly grossed Rs 5 crore. While Sivaji played the title role, Asokan played Duryodana, Muthuraman was Arjuna, and N.T.R., Krishna.
“I watched the digi-version of Karnan with my friend and cartoonist Madhan on the first day at Satyam Cinemas. People from different generations thronged the theatre. Sivaji’s unmatched charisma has drawn the present crop of audiences,” says distributor R.G. Venkatesh, an ardent fan of Sivaji.
“My dad was always keen to see the potential in a script for him to perform rather than going in for heroism! That’s his success mantra,” remarked his actor-son Prabhu.
Divya Films is to celebrate the 100th day grandly and plans to invite CM Jayalalithaa for the glitzy event as her mother Sandhya played the mother-in-law of Sivaji in the film.
Sivaji Peravai head Chandrashekaran said they have planned several charity programmes on the eve of the 100th day.
Taking a cue from Karnan, a 1970 blockbuster of Sivaji, Sorgam, will be released in July.

Tuesday, February 28, 2012

சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார் சோனியா காந்தி

இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல் நலப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவர் வெளிநாடு ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சை முடிந்து அவர் ஐந்து நாட்களில் டில்லி திரும்புவார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் திவேதி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி இந்திய அரசில் எவ்வித பதவியையும் வகிக்கவில்லை என்றாலும், அரசை நடத்துவது அவர்தான் என்ற எண்ணம் நாட்டில் பரவலாக இருக்கிறது.

அதே நேரம் 64 வயதான சோனியா காந்திக்கு என்ன உடல்நலக் குறைவு என்பது குறித்தோ், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவர் எங்குபோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது பற்றியோ தகவல்களை வெளியிட காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மறுத்து வருகிறது. அதே நேரம் அவர் கேன்சர் தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்றதாக ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில் தெரிவித்திருந்தன.

இந்தியாவிலேயே நல்ல மருத்துவர்களும் உலகத் தரம் வாய்ந்த வசதிகளும் இருக்கும் நிலையில், சோனியா காந்தி சிகிச்சைக்காக ஏன் வெளிநாடு செல்கிறார் என்ற கேள்வியை சிலர் எழுப்பினர். இந்தியாவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் அவருக்குத் தேவைப்படும் தனிமை இருக்காது என்ற காரணத்தை வேறுசிலர் கூறுகின்றனர்.