Thursday, August 23, 2012

எம்.பி.க்களுக்கு சோனியா அறிவுரை

புதுடில்லி : நிலக்கரி சுரங்க மோசடி தொடர்பாக எதிர்கட்சிகள் பார்லிமென்ட்டை முடக்கியுள்ளன. மேலும் இவ்விவகாரத்தில் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்., தலைவர் சோனியா தனது கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பயப்படாமல் உடனுக்கு உடன் தக்க பதில் கொடுக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். ஊழல் தொடர்பாக காங்., மீது பா.ஜ. கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில் சோனியா தனது எம்.பி.க்களுக்கு இந்த அறிவுரையை வழங்கி இருக்கிறார்.

No comments:

Post a Comment