Sunday, December 29, 2013

ஜி கே வாசன் பிறந்தநாள்


ஜி கே வாசன் பிறந்தநாள் விள்ளம்பரம்






ஜி.கே.வாசனுக்கு 49–வது பிறந்த நாள்: சோனியாகாந்தி, மு.க.ஸ்டாலின்–விஜயகாந்த் வாழ்த்து

ஜி.கே.வாசனுக்கு 49–வது பிறந்த நாள்: சோனியாகாந்தி, மு.க.ஸ்டாலின்–விஜயகாந்த் வாழ்த்து

மத்திய மந்திரி ஜி.கே.வாசனுக்கு இன்று 49–வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை காங்கிரசார் சிறப்பாக கொண்டாடினார்கள்.
ஜி.கே.வாசனுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி அன்சாரி, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், மராட்டிய முதல்–மந்திரி, பிரிதிவிராஜ் சவுகான், மேற்கு வங்காள கவர்னர் என்.கே.நாராயணன் ஆகியோர் டெலிபோனில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி எம்.பி., தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தமிழர் தேசிய கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் நடிகர் ராஜ்குமார் தலைமையில் காங்கிரசார் சிறப்பு வழிபாடு நடத்தி வெள்ளி ரதம் இழுத்தனர். இதில் மாநில பொருளாளர் கோவை.தங்கம், துணைத் தலைவர்கள் ஞானசேரகன், விடியல் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மவுண்ட் ரோடு தர்காவில் 49 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக்கை தவுலத்கான் ஏற்பாட்டில் மாநில தலைவர் ஞானதேசிகன் வெட்டினார். சென்னை நந்து, செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடபழனி முருகன் கோவிலில் முன்னாள் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி ஏற்பாட்டில் சிறப்பு பூஜை நடத்தி தங்கத் தேர் இழுத்தனர்.
சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் இன்று காலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நரிக்குறவர் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு காலை உணவும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தி.நகர் கோதண்டபம், ஜார்ஜ், பிரபாகரன் சாந்தாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். என்.எஸ்.கே. நகரில் தினேஷ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் மண்டல தலைவர் சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார்.
எம்.எம்.டி.ஏ. காலனியில் அண்ணாநகர் ராம்குமார் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. மாநில தலைவர் ஞானதேசிகன் தொடங்கி வைத்தார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜீவன் பிரசாந்த்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடபழனி முருகன் கோவிலில் இன்று மதியம் காமராஜ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஞானதேசிகன் தொடங்கி வைத்தார்.
தி.நகர் முத்துரங்கன் சாலையில் நாளை (29–ந்தேதி) நடைபெறும் நிகழ்ச்சியில் கோதண்டன் தலைமையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி விருந்து வழங்கப்படுகிறது. ஞானதேசிகன் வழங்குகிறார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார், தணிகாசலம், சைதைரவி, பின்னி ராதாகிருஷ்ணன், சீனிவாசன், குணசேகரன், முருகேசன், அன்பரசன், வேலுநாயகர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் ஜெயகலா பிரபாகர், கே.கே.நகர் நாகாத் தம்மன் கோவிலில் ஜி.கே.வாசன் பெயரில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடத்தி அன்னதானம் வழங்கினார். 75 பெண்களுக்கு புடவைகள், 75 முதியோர்களுக்கு வேட்டிகள் வழங்கினார்.
அருள்மிகு சிதம்பர விநாயகர் ஸ்ரீநாகாத்தம்மன் கோவில் மற்றும் வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளை மாவட்டத் தலைவர் ராயபுரம் மனோ, ஆர்.கே.நகர் ஜெ.மாரி, கே.எம்.கந்தராஜ், மத்திய அரசு வக்கீல் ஜனார்த்தனன், ஸ்கை ஜிம் ஜெ.பாபு நடத்தி அன்னதானமும் வழங்கினர்.
வேலப்பன்சாவடியில் 500 ஏழைகளுக்கு பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஐ.டி.அரசன் செய்து இருந்தார்.
அயனாவரம் கருமாரியம்மன் ஆலயத்தில் ஆர். புனிதன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் என். பத்மநாபன், வினோபாபு கலந்து கொண்டனர்.
மயிலாப்பூரில் உள்ள அரிமா சங்க ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் ஜி.ஆர்.வெங்கடேஷ் ஏற்பாட்டில் நோயாளிகளுக்கு உதவி தொகையும், பழங்களையும் ஞானதேசிகன் வழங்கினார். இதில் பொருளாளர் கோவை தங்கம், என்.ஆர்.தனபாலன், அரிமா ஆளுனர் வெங்கடேஸ்வரன், ஜி.ஆர். வெங்கடேஷ், மோகனசுந்தரம், சீனிவாசன், ரவி பங்கேற்றனர்.
முன்னதாக கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவிலில் ஜி.கே.வாசன் பெயரில் ஜி.ஆர்.வெங்கடேஷ் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
அசோக் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஜி.கே.வாசன் பிறந்த நாளை யொட்டி மாநில பேச்சாளரும், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளருமான என்.பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு விருந்தினராக ஏ.எஸ்.முன வர்பாஷா கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் மதுராந்தகம் ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் மேனகா பாலகிருஷ்ணன், வட்ட தலைவர் சி.சண்முகம், வட்டார தலைவர் வி.ராம் குமார், எஸ்.சிவராஜ், தாமு, தனசேகரன், ஜீவா, அன்வர்பாஷா, ரவிக்குமார், அகமதுபாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஏ.ஜே.தாஸ் நற்பணி மன்றம் சார்பில் நடந்த ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் ஜே.சுகுமார் தலைமை தாங்கினார். கே.விஜய் கொடி ஏற்றினார். தென்சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் டி.ராஜேந்திரன், வட்ட தலைவர் புதுவை ரவி, கஜேந்திரன், ஜே.பி.சுந்தரபாபு, ஆலிவுட் சண்முகம் கலந்து கொண்டனர்.
திரு.வி.க.நகர் பெத்தேல் காப்பகத்தில் காலை உணவும், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை பிஜுசாக்கோ வழங்கினார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பிரேம்குமார் பால்விளாத் செய்திருந்தார்.

சிறுபான்மையினருக்கு அரணாக மத்திய காங்கிரஸ் அரசு விளங்குகிறது: கிறிஸ்மஸ் விழாவில் ஜி.கே.வாசன் பேச்சு

குமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 16–வது கிறிஸ்துமஸ் விழா 
நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே. வாசன் கலந்து கொண்டு கலாச்சார விழா மற்றும் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொது கூட்டத்திற்கு இயக்க தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். இயக்க துணைத் தலைவர் கிறிஸ்து ராஜ் வரவேற்றார், குமரி தென்னிந்திய பிரதம பேராயர் தேவ கடாட்சம், கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ், தக்கலை மறைமாவட்ட ஆயர் மார்ஜார்ஜ் ராஜேந்திரன், ஆயர் ஏசுதாஸ், பெந்தேகோஸ்தே கூட்டமைப்புத் தலைவர் தேவசுந்தரம் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:–
கிறிஸ்தவ சமுதாயம் உலகம் முழுவதும் அன்பை போதித்து வருகிறது. இந்தியாவில் கல்வி வளர்ச்சி, பொருளாதார ஏற்றம் ஆகியவற்றில் கிறிஸ்தவ சமயத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. நான் கல்வி பயின்றது சென்னையில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் தான். இன்று முக்கிய நகரங்கள் உட்பட இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கிறிஸ்தவர்களின் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள் என நிறுவனங்கள் இல்லாத இடமே கிடையாது. கிறிஸ்தவ பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் சிறந்த ஒழுக்கம் மிக்கவர்களாக, சிறந்த தலைவர்களாக உருவாகி வருகின்றனர்.
மத்திய காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய, சிறுபான்மையின மக்களுக்கு பலகோடிகணக்கான திட்டங்களை செயல்படுத்தி அவர்கள் பாதுகாப்பாக வாழ வழிவகுக்கிறது. காங்கிரஸ் அரசை தவிர வேறு எந்த அரசாலும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது, சிறுபான்மையினருக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தியது இந்த காங்கிரஸ் அரசு தான் என்பதை யாரும் மறக்க முடியாது.
நான் சார்ந்திருக்கின்ற அரசு நாளைய தினம் வேற்றுமைகளை உருவாக்கக் கூடிய மதவாத சக்திகளை தலை தூக்க விடாமல் தடுக்கும். எனவே காங்கிரஸ் அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹெலன் டேவிட்சன், ராமசுப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப், விஜயதரணி, புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தகுமார், விடியல்சேகா, குமாரதாஸ், கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர் கிளாடிஸ் லில்லி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

Thursday, September 12, 2013

ABCD for Narendra Modi



ABCD for Narendra Modi

A for Amit Shah, Amjad Ali Akbarali Rana
B for Best Bakery, Bilquis Bano and Babu Bajrangi
C for Chamanpura Massacre and Citizens for Justice and Peace
D for D. G. Vanzara
E for Ehsan JafriF for Final SolutionG for Gulberg, Godhra, Geetha Johri IPS and Gulabchand KatariaH for Haren PandyaI for Ishrat JahanJ for Javed Sheikh @ Pranesh Pillai, Judge Jyotsna YagnikK for Kauser Bi, Kauser Banu and Kutte ke bachcheL for LPG cylindersM for Maya Kodnani and Mukul AnandN for Naroda Patiya and Noorani MasjidO for O. P. Mathur IPSP for Parzania, Praveen Togadia and PP PandeR for R.B. Sreekumar IPS, Rahul Sharma IPS, Rahim Qasim Sumra and Rajinder KumarS for Sohrabuddin, Sadiq Jamal, SP Tamang, Satish Verma & Sanjiv BhattT for Tulsiram Prajapati, Teesta Setalvad and Tarun BarotU for Uma Bharati and Mulla UmarjiV for VHPW for Wali GujaratiX for Azhar Mody and all others still missing like himY for Yashovardhan AzadZ for Zeeshan Johar, Zakia Jafri and Zaheera Shaikh

Saturday, August 24, 2013

Congress humbles JDS in Karnataka bastion

he ruling Congress in Karnataka Saturday won two Lok Sabha seats in the state for which bypolls were held Aug 21, humbling the Janata Dal-Secular (JD-S) in its strongholds.

D.K. Suresh of the Congress defeated Anita Kumaraswamy of the JD-S in Bangalore Rural Lok Sabha constituency by over 126,000 votes. In Mandya (about 80km from Bangalore), actor Ramya of the Congress beat C.S. Puttaraju of the JD-S by nearly 70,000 votes.

Anita is the daughter-in-law of JD-S president and former Prime Minister H.D. Deve Gowda. She is married to H.D. Kumaraswamy, the J-DS state chief and former chief minister.

Shocked by the loss, Kumaraswamy announced he was resigning as state party chief and was also thinking of quitting as leader of opposition in the assembly.

Announcing the results, an election commission spokesperson said Suresh got over 575,000 votes to Anita's around 441,000. The Bangalore Rural constituency has over two million voters, of whom nearly 52 percent exercised their franchise.

Ramya polled over 480,000 votes while Puttaraju received 416,000. The constituency has around 1.6 million voters and saw over 58 percent turnout.

The votes were counted Saturday. 

The JD-S, though backed by the Bharatiya Janata Party (BJP), failed to retain the two seats it had won in 2009 - Bangalore Rural by Kumaraswamy and Mandya by N. Cheluvarayaswamy.
Both quit the Lok Sabha on getting elected to the Karnataka assembly in May, necessitating the bypolls.

The BJP withdrew its candidates from the fray to avoid what it called a "split in anti-Congress votes".

Though the winners will have less than a year's tenure in the Lok Sabha as general elections are due April-May next, the Congress and the JD-S had turned the bypolls into battle of prestige.

The Congress wanted to win the seats as the bypolls were the first to be held after the party returned to power on its own in May after nine years.

The party was keen to defeat the JD-S in its strongholds hoping to demoralise that party ahead of the general elections.

The JD-S sought to retain the seats as a loss would be a big blow to the Gowda family which has the final say in party matters.

A beaming Chief Minister Siddaramaiah told reporters in Bangalore: "I had said earlier the Congress will win both the seats. This is not just the defeat of JDS, but also of the BJP and the Karnataka Janata Party (led by former BJP leader B.S. Yeddyurappa)."

In New Delhi, Congress General Secretary Digvijaya Singh, incharge of the party in Karnataka, used the victory to take a dig at the media.

He told reporters that the results would not have any bearing on the general elections. However, these show the media had a "negative image" of the Congress and now that should be corrected.

Though the JD-S and BJP have 40 seats each in the 225-member assembly that includes one nominated member, the JD-S is recognised as the official opposition party as it polled more votes than BJP in the May assembly elections.

The Congress had won 122 seats. The remaining seats are held by smaller parties and independents.

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி; குத்து ரம்யா எம்.பியானார்

கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா, பெங்களூர் புறநகர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களான நடிகை குத்து ரம்யா, மற்றும் டி.கே.சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மாண்டியா தொகுதியில் காங்‌கிரஸ் வேட்பாளராக திரைப்பட நடிகை குத்து ரம்யாவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் புட்டராஜூவும் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது நடிகை ரம்யா மீது எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அத்துடன் அவரது வளர்ப்பு தந்தையும் திடீரென காலமானார். இதனால் மக்கள் முன் கண்ணீருடனேயே அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பெங்களூரு புறநகர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மருமகளும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியுமான அனிதா குமாரசாமி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சுரேஷ் நிறுத்தப்பட்டார்.

இந்த இரு தொகுதிகளிலும் கடந்த 21 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முற்பகல் 11.45 மணியளவில் இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

மாண்டியா தொகுதியில் நடிகை ரம்யா 47,662 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பியாகிவிட்டார். பெங்களூர் புறநகர் தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
மேலும் படிக்க

Wednesday, July 31, 2013

DistrictCongressYSRCPTDPTRSOthersPANCHAYAT POLLSDistrictCongressYSRCPTDPTRSOthers
UNANIMOUS+I+II+III45964285420613142275LPrakasam9453 6
Chittoor224728 4INellore283310 20
YSR Dist.106120 2VAdilabad123321413
Kurnool414224 9EKarimnagar231135520
Anantapur286244   Nizamabad34 62926
Srikakulam421620 16UWarangal233214722
Vijayanagaram     PMedak 6 11 
Vishakhapatnam 152617 2DKhammam163629119
East Godavari 18107 4ANalgonda801020313
West Godavari152810 4TRanga Reddy19 1676
Krishna8219 1EMahaboobnagar876188
Guntur162710 2S

Sunday, January 20, 2013

இந்திய மக்களுக்காகவும், கட்சிக்காகவும் போராடுவேன்: ராகுல் உரை


ஜெயப்பூர்: இந்திய மக்களுக்காவும், காங்கிரஸ் கட்சிக்காகவும் இறுதி வரை போராடுவேன் என ஜெய்ப்பூரில் நடக்கும் காங்கிரஸ் கட்சி மாநாட்டின் இறுதி நாளில் துணைத்தலைவர் ராகுல் பேசினார்.

ஜெய்ப்பூரில் நடக்கும் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ராகுலுக்கு துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டின் கடைசிநாளான இன்று காலை கட்சி தலைவர்சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் உள்ளிட்ட பல தலைவர்கள் பேசினர்.

இதன் பின்னர் இன்று மாலை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பேசியதாவது: எனக்கு ஆதரவு அளித்ததற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். கடந்த 8 வருடங்களில் கட்சி எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. 1947ம் வருடம் இந்தியா ஆயுதத்தால் விடுதலை பெறவில்லை. அமைதியாகவும், மக்களின் அறப்போராட்டம் மூலமாகவும் விடுதலை பெற்றது. ஆயுதம் ஏந்தாமல், வெள்ளையர்களை நாட்டை விட்டு அனுப்புவோம் என காங்கிரஸ் கூறியது. மகாத்மா காந்தி வழிவந்தவர்கள், ஜனநாயகம் தான் அரசியல் சட்டத்தின் முக்கியமானது என வலியுறுத்தினர். மதம், ஜாதி பாராமல், இந்தியர்கள் ஒவ்வொருவரும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க உள்ளனர். பசுமைப்புரட்சி விவசாயிகளின் குரலை திருப்பி கொடுத்தது. தகவல் தொழில்நுட்ப புரட்சி மக்களின் குரலை திருப்பி கொடுத்தது.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, பல உரிமைகளை வழங்கி ஆயிரகணக்கான மக்களின் உரிமைகளை உறுதி செய்தது. தற்போது முதல் முறையாக மக்கள் தங்கள் உரிமைகளை உறுதி செய்துள்ளனர். ஆயிரகணக்கானவர்கள், கடந்த காலங்களில் இந்திய அரசியல் அமைப்பு தடுமாறுகிறது என கூறுகின்றனர். நமது அமைப்பில் அதிகாரம் என்பது மையமாக உள்ளது. மக்களை முன்னேற்றாமல், இங்கு எதையும் மாற்ற முடியாது. தற்போது ஊழல் பெரிய பிரச்னையாக உள்ளது. அதை ஒழிப்பது பற்றி பேசுகின்றனர். பெண்களை மதிக்காதவர்கள், பெண்களின் உரிமைகள் பற்றி பேசுகின்றனர். இன்று முதல் ஒவ்வொருவருக்காகவும் பாடுபட போகிறேன். ஆம் ஆத்மியை அரசியலில் கொண்டு வர வேண்டும். இதனை நாம் மூடிய அறைகளுக்குள் இருந்து பேசுகிறோம். இளம் வயதினர் மற்றும் பொறுமையற்றவர்கள் பலர் நீண்ட குரல் கொடுக்கன்றனர். அவர்கள் அமைதியாக கவனிக்க மாடடார்கள். சிறந்த எதிர்காலத்திற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனது தந்தை ஏழைகளுக்கு 15 பைசா சென்றடைவது பற்றி பேசுவார். ஆனால் இப்போது அவர்களுக்கு 99 பைசா சென்றடைவதை உறுதி செய்துள்ளோம். ஆனால் எதிர்கட்சியினர், இதனை லஞ்சம் கொடுப்பதாக கூறுவார்கள்.

காங். பெரிய குடும்பம்
அதிகார பரவலை டில்லியிலிருந்து பஞ்சாயத்துகளுக்கு கொடுக்க வேண்டும். நான் இளைஞர்களை பார்த்த பெருமையடைகிறேன். அவர்களுக்கு உலகளவில் பல்வேறு சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைக்க நமது அமைப்புகள் பயற்சியளிக்க வேண்டும். நீங்கள் எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளீர்கள். காங்கிரஸ் என்பது கட்சியல்ல மிகப்பெரிய குடும்பம். இது தான் உலகில் மிகப்பெரிய குடும்பம். ஒவ்வொரு இந்தியனுக்கும் அறை உள்ளது. இந்த குடும்பத்தில், உங்களின் கருத்துக்களை வைத்து மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த நான் தற்போது துணைத்தலைவராகியுள்ளேன்.

இன்று முதல் நான் உங்கள் அனைவருக்காக உழைக்க போகிறேன். உங்களின் குரலை கேட்பதுடன். உங்களை சமமாக நடத்துவேன் என்பதை உறுதி கூறுகிறேன். அரசியலில் கடினமாக உழைத்து மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். ஆனால் இதை மெதுவாகவும், நீண்ட காலத்திற்கும் செய்ய வேண்டும். காங்கிரஸ் மகாத்மா காந்தியின் அமைப்பு. இந்தியாவின் ஒவ்வொரு அசைவும் கொண்டுள்ளது. இதனை எதிர்கட்சியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ச்சிக்கான தலைவர்களை நாம் முன்னிறுத்த வேண்டும். இன்று முதல் அடுத்த 5 ஆண்டுகளில், நாட்டை ஆளக்கூடிய 40 முதல் 50 தலைவர்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.

கடும் நடவடிக்கை- மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு Jaipur ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 1:53 PM IST





ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிந்தனை அமர்வு என்ற பெயரில் 2 நாள் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரசின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 3-ம் நாளான இன்று காரிய கமிட்டியின் சிறப்பு கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி மற்றும் நாடு முழுவதும் இருந்து 1,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் ராகுல்காந்தியை துணைத் தலைவராக நியமித்ததற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கட்சியின் முக்கிய குறிக்கோள்கள் அடங்கிய 5 அம்ச தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு சோனியா காந்தி தொடக்க உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
2 நாள் நடந்த சிந்தனை அமர்வு கூட்டத்தில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அலசப்பட்டது. நமது நாடு மட்டுமின்றி சர்வதேச அளவிலான முக்கிய பிரச்சினைகளை விவாதிக்கவும் இந்த கூட்டம் ஒரு வாய்ப்பை வழங்கியது.
நாட்டில் ஊழல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஊழல் நாட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கிறது. ஊழல் வேரோடு ஒழிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இதுபோன்ற சட்டங்களை உள்ளடக்கிய முக்கிய 5 அம்ச திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதன்மூலம் ஊழலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லி கற்பழிப்பு சம்பவத்தில் பலியான மாணவி, பெண்களின் அடையாளமாக உள்ளார். பாலியல் கொடுமைக்கு பலியான அவருக்கு நீதி கிடைக்கும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவது அடிப்படை உரிமை. பெண்களுக்கு எதிரான கொடுமை களை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். பெண்களுக்கு சமநீதி, அந்தஸ்து வழங்கப்படும். பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். நான் தனிப்பட்ட முறையிலும் இதை வலியுறுத்துவேன்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நேரடி மானியம் வழங்கும் திட்டத்தால் ஊழல் முற்றிலும் ஒழிந்து போகும். இதன் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள்.
காங்கிரஸ் ஏன் மக்களின் சிறந்த தேர்வாக இருக்கிறது என்பதை நாம் மக்களுக்கு தெளிவாக விளக்கிச் சொல்ல வேண்டும். சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் நமக்கு உண்டு.
பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக நாம் பாடுபடுகிறோம். நாட்டின் ஒற்றுமை மற்றும் சீரிய நிலைக்கு எதிரான சக்திகளை அழிக்க நாம் போராட வேண்டும்.
நாட்டில் வறுமையை ஒழிக்க காங்கிரஸ் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 8 1/2 ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறது. செயல்திறன் கொண்டதாக அரசு விளங்குகிறது.
டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள், சர்வதேச சந்தை நிலவர மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டது. அதற்கான கட்டாய சூழல் உருவானது. எனவே இதற்கான சரியான காரணத்தை நாம் மக்களிடம் விளக்கி கூற வேண்டும்.
மக்களுக்கு நம் மீது ஒரு உயர்ந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் உள்ளது. அதை ஒருபோதும் வீண் போக நாம் அனுமதிக்கக் கூடாது. நமக்கு ஆதரவு தரும் மக்களின் வாழ்க்கைத்தரம் தாழ்ந்து போகவிடக் கூடாது. மக்களுக்காக நாம் ஒன்றாக உழைத்தால் வரும் 2014 தேர்தலில் நாம் வெல்வது உறுதி.

ராகுல் தலைமையில் 2014-ல் வெற்றி உறுதி: காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

ராகுல் தலைமையில் 2014-ல் வெற்றி உறுதி: காங்கிரஸ் தலைவர்கள் கருத்து
ராகுல்...
 
இந்த மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்தால்தான் காங்கிரசை காப்பாற்ற முடியும்- மீண்டும் அரியணையில் காங்கிரசை அமர வைக்க முடியும் என்பது கட்சியின் அடிமட்ட தொண்டன் முதல் உயர் மட்ட தலைவர்கள் வரை அத்தனை பேரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
 
அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ராகுல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சோனியாவின் வழிகாட்டுதலும், ராகுலின் வழி நடத்துதலும் காங்கிரசை வெற்றி வாகை சூட வைக்கும் என்று காங்கிரசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியதாவது:-
 
கட்சி தலைமை தாமதமாக எடுத்த முடிவாக இருந்தாலும் நல்ல முடிவு. கடந்த 8 வருடங்களாக ராகுலின் செயல்பாட்டை பார்த்து வருகிறோம்.
 
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டு மக்களை ஒன்றாக இணைக்கும் சக்தி நேரு குடும்பத்துக்கு உண்டு. அந்த வழியில் இளம் தலைவராக உருவெடுத்துள்ள ராகுல் காந்தி இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல தகுதியானவர். கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை நேரில் அறிகிறார். இந்தியா முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து பேசி கட்சி தலைவர்களையும், அவர்களின் எண்ண ஓட்டங்களையும் அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.
 
அவரது உழைப்பால்தான் உத்தரபிரதேசத்தில் 20 எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது. அவரது தலைமை கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல் அமையும். அடுத்த ஆண்டு பொது தேர்தலை சந்திக்க நல்ல ஆரம்பம் இது.
 
2020-ம் ஆண்டில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 60 சதவீதத்துக்கு மேல் இருப்பார்கள். எனவே இளைஞர் சக்தியால்தான் நாட்டை மேம்படுத்த முடியும். புதிய சிந்தனை உள்ள இளைஞர்கள், புதிய இந்தியாவை காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ராகுல் தலைமையை ஏற்பார்கள்.
 
வருகிற தேர்தலில் எத்தனை கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் ராகுல் தலைமையில் சந்திக்க முடியும். மக்கள் ஆதரவு பெருகும்.
 
முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் கூறியதாவது:-
 
ராகுல் காந்தி துணைத் தலைவர் ஆனது இளைஞர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை உறுதிபடுத்தி உள்ளது. ராகுல் காந்தி தனது சகாக்களை நேரடியாக தேர்வு செய்யும் சுதந்திரம் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
 
புதிய இந்தியாவை படைப்போம் என்ற கோஷத்தோடு பதவி ஏற்றுள்ளார். அவரது வருகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொண்டர்களுக்கு உற்சாகத்தை தரும். மக்களுக்கும் காங்கிரஸ் மீது பலமான நம்பிக்கையை கொடுக்கும்.
 
பா.ஜனதா கட்சியினர் போட்டி போட்டு எதிர்க் கிறார்கள். எங்கள் கட்சி விவகாரத்தில் தலையிட அவர்களுக்கு உரிமை இல்லை. எங்களால் எங்கள் தலைவரை அடையாளம் காட்ட முடிந்துள்ளது. அவர் களால் முடியுமா?
 
மோடியை முன்னிலை படுத்துபவர்கள் என்று கூறுகிறார்கள். அவரது மஸ்தான் வேலைகள் குஜராத்துக்கு வெளியே செல்லுபடியாகாது. குஜராத்துக்கு வெளியே அவருக்கு செல்வாக்கு இல்லை.
 
ராகுலின் வருகையால் கட்சியில் மூத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அவர்களும் ராகுலை தலைவராக ஏற்று கொள்கிறார்கள். ராகுல் இளைஞர்களை முன் எடுத்து சென்றாலும் மூத்தவர்களின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்று வருகிறார்.
 
காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கோபண்ணா கூறியதாவது:-
 
128 ஆண்டு கால பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சிக்கு 42 வயது இளைஞர் துணை தலைவராக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே கட்சியின் பொது செயலாளராக 8 ஆண்டுகள் பணியாற்றி பயிற்சி பெற்று இப்போது இந்த பதவிக்கு வந்துள்ளார்.
 
ராகுல் வருகையால் வருகிற பொது தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தவும் அமைப்பு ரீதியாக தொண்டர்களை திரட்டவும் முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. 2004 முதல் 2009 வரை ஆட்சியில் இருந்த மதவாத சக்திகள் எப்படி வீழ்த்தப்பட்டதோ அதேபோல் வருகிற தேர்தலிலும் வீழ்த்தப்படும். அதற்கான வியூகங்களை வகுக்கும் கடமை அவருக்கு உள்ளது.
 
ராஜீவ் 41 வயது இளைஞராக இருந்தபோது கட்சியின் பொது செயலாளர் பதவியை ஏற்றார். அதேபோல் ராகுலும் பதவிக்கு வந்துள்ளார். அதற்காக வாரிசு அரசியல் என்று கூற முடியாது. இந்தியாவில் வாரிசு அரசியலை உருவாக்க முடியாது. ஆனால் நேரு குடும்பத்தை நாட்டு மக்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளார்கள். வாரிசு உருவாக்கப்படவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்தல் மூலம் மக்களின் வாக்குகளை பெற்று மக்களின் அங்கீகாரத்துடன்தான் பதவிக்கு வர முடிகிறது.
 
நேரு மறைவுக்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். அவருக்கு பிறகுதான் இந்திரா பொறுப்புக்கு வந்தார். அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு ராஜீவ் காந்தி வந்தார். அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியல் துறவறம் பூண்டார் சோனியா காந்தி.
 
நேரு குடும்பம் இல்லாத போதுதான் மாற்று கட்சிகள் ஆட்சியை பிடித்தன. சீதாராம் கேசரி தலைவராக இருந்த போது 1998-ல் வகுப்பு வாத கட்சிகள் ஆட்சியை பிடித்தன.
 
அதன் பிறகு தனது கணவரின் லட்சியத்தை நனவாக்க சோனியா அரசியலுக்கு வந்ததும் வகுப்பு வாத ஆட்சி விரட்டியடிக்கப்பட்டது. பல மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. மாநில கட்சிக்காக வேகமாக வேரூன்றி வளர்ந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வலிமைமிக்க தலைவராக ராகுல் இருப்பார். மக்களுக்கு ராகுல் மீது நம்பிக்கை உள்ளது.