Saturday, February 8, 2014

வரலாறே தெரியாதவர் மோடி: குஜராத் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கடும் தாக்கு

குஜராத் மாநிலம் பர்டோலியில் இன்று நடந்த காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில், கட்சியின் பிரச்சாரக் குழு தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

வரலாறே தெரியாதவர்கள் குஜராத்தை ஆட்சி செய்கிறார்கள். காந்தி, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களைப் பற்றி குஜராத் தலைவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விஷத்தன்மை கொண்ட அமைப்பு என்று வல்லபாய் பட்டேல் கூறியிருந்தார். ஆனால், பட்டேலைப் பற்றி எதுவும் தெரியாத மோடி இப்போது அவரது சிலையை அமைக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தமே காந்தி கொலைக்கு காரணம்.

நாட்டின் ஒற்றுமை பற்றி பேசுவதற்கு பா.ஜனதாவுக்கு தகுதியில்லை. கடந்த 9 ஆணடுகளாக குஜராத்தில் லேக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை. குஜராத்தில் அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 55 ஆயிரம் சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

ஊழல் எதிர்ப்பு குறித்து பேசும் பா.ஜனதா ஊழலுக்கு எதிரான மசோதாக்களை தடுக்கிறது. குஜராத்தில் சிறைக்குச் சென்றவர்களே அமைச்சர்களாக வருகின்றனர்.

விவசாயிகளுக்காகவும், அவர்களின் விளைநிலங்களுக்காகவும் போராடிய கட்சி காங்கிரஸ். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ். இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டும். குஜராத்தில் ஒரு ஆணையர்தான் உள்ளார். அதுவும் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment