Wednesday, February 5, 2014

பல்லாவரத்தில் கெஜ்ரிவாலை கண்டித்து காங்கிரஸ் நூதன போராட்டம்: .கொடும்பாவி எரிப்பு

தாம்பரம், பிப். 4–
நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்கட்சிகள் மற்றும் மத்திய மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்லாவரம் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.
செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.செந்தில்குமார், சக்கரபாணி ரெட்டியார்,  தாம்பரம் நகர தலைவர் மணி,  C K மூர்த்தி  ரூபி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
முன்னதாக எருமை மாட்டின் மீது கெஜ்ரிவால் போட்டோவை ஒட்டி பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ஆர்ப்பாட்டம் நடந்த மேடை வரை காங்கிரசார் கொண்டு வந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, மூர்த்தி, நாராயணன்,  உள்பட 2300–க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். கெஜ்ரிவால் உருவ பொம்மையையும் எரித்தனர்.

No comments:

Post a Comment