Sunday, December 29, 2013

ஜி கே வாசன் பிறந்தநாள்


ஜி கே வாசன் பிறந்தநாள் விள்ளம்பரம்






ஜி.கே.வாசனுக்கு 49–வது பிறந்த நாள்: சோனியாகாந்தி, மு.க.ஸ்டாலின்–விஜயகாந்த் வாழ்த்து

ஜி.கே.வாசனுக்கு 49–வது பிறந்த நாள்: சோனியாகாந்தி, மு.க.ஸ்டாலின்–விஜயகாந்த் வாழ்த்து

மத்திய மந்திரி ஜி.கே.வாசனுக்கு இன்று 49–வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை காங்கிரசார் சிறப்பாக கொண்டாடினார்கள்.
ஜி.கே.வாசனுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி அன்சாரி, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், மராட்டிய முதல்–மந்திரி, பிரிதிவிராஜ் சவுகான், மேற்கு வங்காள கவர்னர் என்.கே.நாராயணன் ஆகியோர் டெலிபோனில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி எம்.பி., தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தமிழர் தேசிய கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் நடிகர் ராஜ்குமார் தலைமையில் காங்கிரசார் சிறப்பு வழிபாடு நடத்தி வெள்ளி ரதம் இழுத்தனர். இதில் மாநில பொருளாளர் கோவை.தங்கம், துணைத் தலைவர்கள் ஞானசேரகன், விடியல் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மவுண்ட் ரோடு தர்காவில் 49 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக்கை தவுலத்கான் ஏற்பாட்டில் மாநில தலைவர் ஞானதேசிகன் வெட்டினார். சென்னை நந்து, செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடபழனி முருகன் கோவிலில் முன்னாள் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி ஏற்பாட்டில் சிறப்பு பூஜை நடத்தி தங்கத் தேர் இழுத்தனர்.
சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் இன்று காலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நரிக்குறவர் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு காலை உணவும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தி.நகர் கோதண்டபம், ஜார்ஜ், பிரபாகரன் சாந்தாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். என்.எஸ்.கே. நகரில் தினேஷ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் மண்டல தலைவர் சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார்.
எம்.எம்.டி.ஏ. காலனியில் அண்ணாநகர் ராம்குமார் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. மாநில தலைவர் ஞானதேசிகன் தொடங்கி வைத்தார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜீவன் பிரசாந்த்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடபழனி முருகன் கோவிலில் இன்று மதியம் காமராஜ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஞானதேசிகன் தொடங்கி வைத்தார்.
தி.நகர் முத்துரங்கன் சாலையில் நாளை (29–ந்தேதி) நடைபெறும் நிகழ்ச்சியில் கோதண்டன் தலைமையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி விருந்து வழங்கப்படுகிறது. ஞானதேசிகன் வழங்குகிறார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார், தணிகாசலம், சைதைரவி, பின்னி ராதாகிருஷ்ணன், சீனிவாசன், குணசேகரன், முருகேசன், அன்பரசன், வேலுநாயகர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் ஜெயகலா பிரபாகர், கே.கே.நகர் நாகாத் தம்மன் கோவிலில் ஜி.கே.வாசன் பெயரில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடத்தி அன்னதானம் வழங்கினார். 75 பெண்களுக்கு புடவைகள், 75 முதியோர்களுக்கு வேட்டிகள் வழங்கினார்.
அருள்மிகு சிதம்பர விநாயகர் ஸ்ரீநாகாத்தம்மன் கோவில் மற்றும் வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளை மாவட்டத் தலைவர் ராயபுரம் மனோ, ஆர்.கே.நகர் ஜெ.மாரி, கே.எம்.கந்தராஜ், மத்திய அரசு வக்கீல் ஜனார்த்தனன், ஸ்கை ஜிம் ஜெ.பாபு நடத்தி அன்னதானமும் வழங்கினர்.
வேலப்பன்சாவடியில் 500 ஏழைகளுக்கு பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஐ.டி.அரசன் செய்து இருந்தார்.
அயனாவரம் கருமாரியம்மன் ஆலயத்தில் ஆர். புனிதன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் என். பத்மநாபன், வினோபாபு கலந்து கொண்டனர்.
மயிலாப்பூரில் உள்ள அரிமா சங்க ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் ஜி.ஆர்.வெங்கடேஷ் ஏற்பாட்டில் நோயாளிகளுக்கு உதவி தொகையும், பழங்களையும் ஞானதேசிகன் வழங்கினார். இதில் பொருளாளர் கோவை தங்கம், என்.ஆர்.தனபாலன், அரிமா ஆளுனர் வெங்கடேஸ்வரன், ஜி.ஆர். வெங்கடேஷ், மோகனசுந்தரம், சீனிவாசன், ரவி பங்கேற்றனர்.
முன்னதாக கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவிலில் ஜி.கே.வாசன் பெயரில் ஜி.ஆர்.வெங்கடேஷ் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
அசோக் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஜி.கே.வாசன் பிறந்த நாளை யொட்டி மாநில பேச்சாளரும், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளருமான என்.பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு விருந்தினராக ஏ.எஸ்.முன வர்பாஷா கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் மதுராந்தகம் ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் மேனகா பாலகிருஷ்ணன், வட்ட தலைவர் சி.சண்முகம், வட்டார தலைவர் வி.ராம் குமார், எஸ்.சிவராஜ், தாமு, தனசேகரன், ஜீவா, அன்வர்பாஷா, ரவிக்குமார், அகமதுபாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஏ.ஜே.தாஸ் நற்பணி மன்றம் சார்பில் நடந்த ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் ஜே.சுகுமார் தலைமை தாங்கினார். கே.விஜய் கொடி ஏற்றினார். தென்சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் டி.ராஜேந்திரன், வட்ட தலைவர் புதுவை ரவி, கஜேந்திரன், ஜே.பி.சுந்தரபாபு, ஆலிவுட் சண்முகம் கலந்து கொண்டனர்.
திரு.வி.க.நகர் பெத்தேல் காப்பகத்தில் காலை உணவும், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை பிஜுசாக்கோ வழங்கினார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பிரேம்குமார் பால்விளாத் செய்திருந்தார்.

சிறுபான்மையினருக்கு அரணாக மத்திய காங்கிரஸ் அரசு விளங்குகிறது: கிறிஸ்மஸ் விழாவில் ஜி.கே.வாசன் பேச்சு

குமரி மாவட்டம் அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 16–வது கிறிஸ்துமஸ் விழா 
நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே. வாசன் கலந்து கொண்டு கலாச்சார விழா மற்றும் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொது கூட்டத்திற்கு இயக்க தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். இயக்க துணைத் தலைவர் கிறிஸ்து ராஜ் வரவேற்றார், குமரி தென்னிந்திய பிரதம பேராயர் தேவ கடாட்சம், கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ், தக்கலை மறைமாவட்ட ஆயர் மார்ஜார்ஜ் ராஜேந்திரன், ஆயர் ஏசுதாஸ், பெந்தேகோஸ்தே கூட்டமைப்புத் தலைவர் தேவசுந்தரம் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:–
கிறிஸ்தவ சமுதாயம் உலகம் முழுவதும் அன்பை போதித்து வருகிறது. இந்தியாவில் கல்வி வளர்ச்சி, பொருளாதார ஏற்றம் ஆகியவற்றில் கிறிஸ்தவ சமயத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. நான் கல்வி பயின்றது சென்னையில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் தான். இன்று முக்கிய நகரங்கள் உட்பட இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கிறிஸ்தவர்களின் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள் என நிறுவனங்கள் இல்லாத இடமே கிடையாது. கிறிஸ்தவ பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் சிறந்த ஒழுக்கம் மிக்கவர்களாக, சிறந்த தலைவர்களாக உருவாகி வருகின்றனர்.
மத்திய காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய, சிறுபான்மையின மக்களுக்கு பலகோடிகணக்கான திட்டங்களை செயல்படுத்தி அவர்கள் பாதுகாப்பாக வாழ வழிவகுக்கிறது. காங்கிரஸ் அரசை தவிர வேறு எந்த அரசாலும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது, சிறுபான்மையினருக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தியது இந்த காங்கிரஸ் அரசு தான் என்பதை யாரும் மறக்க முடியாது.
நான் சார்ந்திருக்கின்ற அரசு நாளைய தினம் வேற்றுமைகளை உருவாக்கக் கூடிய மதவாத சக்திகளை தலை தூக்க விடாமல் தடுக்கும். எனவே காங்கிரஸ் அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹெலன் டேவிட்சன், ராமசுப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப், விஜயதரணி, புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தகுமார், விடியல்சேகா, குமாரதாஸ், கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர் கிளாடிஸ் லில்லி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.