Friday, October 7, 2011

திருச்சி மாநகராட்சி : காங்., மேயர் வேட்பாளர் மாற்றம்


சென்னை, அக்.6 காங்கிரஸ் சார்பில் திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

விஜயா சேகர் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் 17ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 30ஆம் தேதி தொடங்கியது. வரும் 7ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

திருச்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் எம்.எஸ்.ஆர்.ஜெயா போட்டியிடுகிறார். திமுக சார்பில் விஜயா ஜெயராஜ் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் சுஜாதா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று சுஜாதா மறுத்து விட்டார். தற்போது மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் அவர் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று கூறிவிட்டார்.

காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட மறுத்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் திருச்சி மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் விஜயா சேகர் போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment